உச்சகட்ட பரபரப்பு.. களமிறங்கிய ஓ.பி.எஸ்.. விஜயகாந்துடன் சந்திப்பு.. புன்னகையுடன் ரிட்டர்ன்!
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று சந்தித்து பேச்சு நடத்தினார். திரும்பிப் போகும்போது ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் புன்னகைத் தாமரை மலர்ந்திருந்தது!
லோக்சபா தேர்தலுக்காக விஜயகாந்தின் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்று மிக பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறது. தேமுதிக தொடர்ந்து இதில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
தேமுதிக என்ன செய்ய போகிறது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்று கூறி வருகிறார்கள்.
விஜயகாந்த் "ஹேப்பி"யாக உள்ளார்.. நாளைக்குள் நல்ல முடிவு எட்டப்படும்.. ஓபிஎஸ் மகிழ்ச்சி பேட்டி!
இந்த நிலையில் நாளை தேமுதிக சார்பாக தேமுதிக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து தற்போது விஜயகாந்துடன் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரன்று சந்தித்து பேசினார். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அவர்களை வாசலில் நின்று வரவேற்றார் சுதீஷ்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓ. பன்னீர் செல்வம், நாளைக்குள் நல்ல முடிவு எட்டப்படும் என்று கூறி புன்னகையுடன் திரும்பிச் சென்றார்.