ஆ ராசா பற்றிய பேச்சு..பாஜக மாஜி தலைவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி
சென்னை: திமுக எம்பி ஆ ராசா குறித்து இழிவாக பேசியதாக பாஜக கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் ஆ ராசா. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் நீலகிரி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். ஆ ராசா மேடைகளில் பேசும் பேச்சு என்பது அடிக்கடி விவாதத்தை கிளப்பும்.

அந்த வகையில் அவர் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் கடந்த 2022ம் செப்டம்பர் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக நிர்வாகி அனந்த குமார் என்பவர் புகார் அளித்தார். இதனடிப்படையில், பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் பாலாஜி உத்தமராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ் ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசா குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதற்காக மூன்றாவது நபர் எப்படி புகார் அளிக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். பாலாஜி உத்தமராமசாமி பேசியதை தான் ஏற்கவில்லை என தெரிவித்த நீதிபதி இந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கோபி, ஆ. ராசா மற்றும் அவரது குடும்பம் குறித்து மிகவும் இழிவாக பேசியுள்ளதாக கூறினார். இதையடுத்து, பாலாஜி உத்தமராமசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு தடைவிதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
-
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!












Click it and Unblock the Notifications