ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி.. வழிகாட்டுதல்களை வெளியிட்ட டிஜிபி சைலேந்திர பாபு! இதுதான் முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் சில இடங்களில் ஆபாச நடனங்கள் மற்றும் தகராறுகள் ஏற்பட்டன. இதனால் போலீசார் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் தான் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அந்த உத்தரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கும் போலீசார் அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் 8 வது நாள் அனுமதி கோரப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்தலாம் எனும் வகையில் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திர பாபு இன்று வெளியிட்டார்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நடக்க கூடாது. பெண் கலைஞர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்க கூடாது. அதோடு பெண் கலைஞர்களுக்கு வேறு ஏதேனும் இன்னல்களை ஏற்படுத்த கூடாது. இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களை ஆடல், பாடலில் இடம்பெற செய்யக்கூடாது.
ஆடல், பாடல் நடத்துவது தொடர்பாக அனுமதி கோரிய மனு மீதான முடிவை 7 நாளில் எடுக்க வேண்டும். இந்த 7 நாளுக்குள் மனு மீதான முடிவு பற்றி விழா குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். 7 நாளில் நடவடிக்கை இல்லாவிட்டால் அனுமதி என கருதி நிகழ்ச்சி நடத்தலாம். இருப்பினும் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள், ஆபாச நடனங்கள் இல்லை என்பதை விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் அருகே மது மற்றம் போதை பொருட்கள் விற்பனையை நடப்பதற்கான பணியை விழா குழுவினர் மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விழா ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழிக்காட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications