"நோ" சொன்ன இறையன்பு.. நெக்ஸ்ட் ரெடியான டிஜிபி சைலேந்திர பாபு.. ஸ்டாலினுக்கு போன விஷயம்.. பரபர கோட்டை
சென்னை: டிஜிபி சைலேந்திர பாபுவின் பணிஓய்வு குறித்த முக்கிய செய்தி ஒன்று நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.. இதுகுறித்து கோட்டை வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் தலைமை பொறுப்பாக இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் காவல்துறையின் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பணிக்காலம் அடுத்தடுத்து நிறைவடையவிருக்கிறது...

எனவே, இந்த இருவர் இடத்திலும் அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது.. தலைமை செயலாளர் பதவிக்கு சிலர் குறி வைத்திருப்பதை போலவே, டிஜிபி பொறுப்புக்கும் ஒருசிலர் வேகமாக காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.
லிஸ்ட்: இதுஒருபுறம் இருந்தாலும், சைலேந்திர பாபு அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற துணைக்கேள்வியும் வட்டமடித்து வருகிறது.. காரணம், முதலில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் லிஸ்ட்டை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிவைக்க வேண்டும்.. அதிலிருந்து 3 பேர் தேர்வுசெய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.. அதன் பிறகு 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வுசெய்யும்.. இதுதான் விதிமுறை.
எனவே அதற்கான நடைமுறைகள் ஒருபக்கம் நடந்து வருவதாக தெரிகிறது.. இதையடுத்து, தமிழ்நாட்டின் டிஜிபி யாகப் பதவி வகித்துவரும் சைலேந்திரபாபு ஐபிஎஸ் இந்த மாதம் ஓய்வுபெற உள்ளதால், ஓய்வுக்கு பிறகு, அரசு சார்ந்த மிகப்பெரிய பதவி ஒன்றில் அமர விரும்புகிறாராம்.. அந்த வகையில், கடந்த மாதமே இதுகுறித்து ஒரு செய்தி கசிந்தது..
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு விருப்பப்படுவதாக சொன்னார்கள்.. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படவில்லை.. சமீபத்தில்தான், டிஎன்பிஎஸ்சி அமைப்பில் காலியாக இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவி விரைவில் நிரப்பப்பட இருப்பதாக தகவலும் வெளியானது.. எனவே, இந்த மாத இறுதியில் சைலேந்திர பாபு ஓய்வு பெறும்நிலையில், விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்படலாம் என்று முணுமுணுப்புகள் கிளம்பின.
கூடுதல் தகவல்: இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. அதாவது, தலைமை செயலாளரும் விரைவில் பணிஓய்வு பெறுவதால், அநேகமாக இவரை, மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி நியமனம் செய்யலாம் என்றார்கள்.. ஆனால், தலைமை செயலாளர் பதவியை நிராகரித்து விட்டாராம்..
இதையடுத்து, "தலைமைச் செயலாளர்" தெரிவித்து விட்டதால், டிஎன்பிஎஸ்சி. சேர்மன் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று கோட்டை வட்டாரங்களில் சொல்லப்பட்டது.. ஆனால், அதையும் தலைமை செயலாளர் விரும்பவில்லையாம்.
சைலேந்திரபாபு: இதை அறிந்த சைலேந்திரபாபு, மறுபடியும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சேர்மன் பதவியை குறி வைத்துள்ளாராம்.. ஆனால், இதற்கும் சில முட்டுக்கட்டைகள் கிளம்பி உள்ளனவாம்.
அதாவது, டிஜிபியாக இருந்து எந்த ஒரு முக்கிய விசயத்திலும், சாதுர்யமாக செயல்பட்டதாக தன்னை சைலேந்திரபாபு நிரூபிக்கவில்லை.. அத்துடன், மிக மிக சென்சிட்டிவ்வான பதவியான டிஎன்பிஎஸ்சி சேர்மன் பதவியில் அவரை நியமித்தால், அது அவ்வளவாக ஆரோக்கியமாக இருக்காது என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.. ஆனால், இதற்கு மேலிட தரப்பு இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.. அதேசமயம், சைலேந்திரபாபுவின் ஆசை நிறைவேறுமா? என்பது இந்த வாரத்தில் தெரியவரும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications