துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு... தினசரி 5 முறை ஆய்வு... டிஜிபி திரிபாதி அதிமுக்கிய உத்தரவு
சென்னை: தேர்தலுக்குப் பின் இவிஎம் இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மையங்களைத் தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 83.92% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாகச் சென்னையில் 59.06% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்குப் பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சிகளை 24 மணி நேரமும் வெளியில் இருப்பவர்கள் பார்க்கும் வகையில் எல்இடி திரைகளும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் இணைந்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும், ஆயுதப்படை காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் தினசரி குறைந்தபட்சம் 5 முறையாவது போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறை பூட்டின் சீல் சேதம் அடையாமல் இருக்கிறதா, சிசிடிவி கேமரா காட்சிகள் சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசார் பணியைச் சரியாக மேற்கொள்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்ய டிஜிபி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications