10-ம் தேதி முதல் காவலர்களுக்கு விடுப்பு கிடையாது... டி.ஜி.பி.சுற்றறிக்கை
சென்னை: வரும் 10-ம் தேதி முதல் காவலர்களுக்கு விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது என டி.ஜி.பி. திரிபாதி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
விடுப்பு தொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தி வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

விடுப்பு கிடையாது
காவலர்களுக்கு 10-ம் தேதி முதல் விடுப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி.திரிபாதி. அனைத்து காவல் நிலையங்களிலும் முழு எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அயோத்தி வழக்கு
அயோத்தில் வழக்கில் அடுத்த வாரம் ஏதாவது ஒரு நாள் தீர்ப்பு வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், டி.ஜி.பி. அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனைத்து காவலர்களையும் திரட்டும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடுவதாக கூறப்படுள்ளது.

முக்கியத்துவம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உள்துறை எச்சரிக்கை
நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மத்திய உள்துறை அமைச்சகமும் பல்வேறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications