#Exclusive திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் குடமுழுக்கு வேகமா நடக்குது.. தருமபுரம் ஆதீனம் பேட்டி!
சென்னை: தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அவரது பேட்டியில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்களுக்கான பணிகள் பற்றிப் பேசியுள்ளார்.
கேள்வி: தமிழ்நாட்டில் சைவ மடங்கள் செய்து வரும் பல்வேறு கல்வி, சமூகம் சார்ந்த பணிகள் பற்றிய புரிதல் மக்களிடம் இருக்கிறதா?
தருமபுரம் ஆதீனம்: இன்றைக்கு ஊடக வளர்ச்சியின் காரணமாக ஓரளவுக்கு வெளியில் தெரிகிறது. ஆனால் முன்பு வெளியில் தெரியாமலேயே தொடர்ச்சியாக பணிகளை செய்து வந்திருக்கிறோம். கலைஞர்களை அரசர்கள் தான் பாராட்டி விருதுகள் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், அதற்கு முன்பே வித்வான்கள், பாடகர்கள், கிராமிய கலைஞர்களுக்கு தங்கம் வழங்கி பாராட்டி இருக்கிறோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல் வெளியீடுகளை ஆதினத்தில் இருந்து செய்திருக்கிறோம்.

திருமுறைகளை தருமபுரம் ஆதீனம் சார்பில் புத்தகம் வடிவில் 12 மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளோம். செயலி வாயிலாகவும் திருமுறைகளை வெளியிட்டுள்ளோம். 1930 காலகட்டத்தில் சிவாச்சாரியார்களுக்கான வகுப்புகளை தருமபுரம் ஆதீனத்தில் தொடங்கினோம். தேவாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தேவார பாடசாலை அமைத்தோம். ஆகம பாடசாலைகளை அமைத்துள்ளோம். திருக்குறள் உரை விளக்கங்களை வெளியிட்டுள்ளோம்.
அரசாங்கம், ஓட்டு வங்கிக்காக ஆதினங்களுக்கு வர வேண்டிய குத்தகை தொகையை தள்ளுபடி செய்துவிடுகிறது. ஆதீன நிலங்களைப் பராமரிப்பவர்களுக்குத்தான் வெள்ள நிவாரண, வறட்சி நிவாரண இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. ஆதீனங்களுக்கு இதனால் இழப்பு ஏற்படுகிறது. எதை வைத்து தரும பணிகளை மேற்கொள்வது?
ஒருவன் தவறு செய்கிறான் என்று சொன்னால் 2 காரணங்கள் இருக்கும். ஒன்று வயிற்றுப் பசி, இன்னொன்று கல்வி அறிவு இல்லாமை. அந்த இரண்டையும் கொடுத்து விட்டால், அவன் நல்லவனாக இருந்து இந்த நாடு நன்மையடையும். பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில், தருமபுரம் ஆதீன கல்வி நிறுவனங்களில் காலையிலேயே மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கேள்வி: தமிழ்நாடு அரசியல் காட்சிகளை கவனிக்கிறீர்களா? அறநிலையத்துறையின் இப்போதைய செயல்பாடு எப்படி இருக்கிறது? அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்காக செய்யும் பணிகள் எப்படி இருக்கிறது?
தருமபுரம் ஆதீனம்: நான்கைந்து குழுக்கள் இருந்ததால், அவை ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்குவதற்கு அதிக கால தாமதம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 80க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திவிட்டோம். குடமுழுக்கு நடத்துவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் அறநிலையத்துறை மீட்டிங்கில் 200 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி பிறப்பிக்கப்படுகிறது.
கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு கொடுப்பதில் இந்த அரசு விரைவாகச் செயல்படுகிறது. அந்தவகையில் இந்த அரசை பாராட்ட வேண்டும். ஆதீனங்களைப் பற்றி புரிந்துகொண்ட அரசு என்பதால், மற்ற அரசுகளை விட சிறப்பாக பணியாற்றி வருகிறது இன்றைய திமுக அரசு.
குன்றக்குடி அடிகளாரை எம்.எல்.சி ஆக்கி அரசியல் பணிகளில் செலுத்தினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. யாராவது ஒருவராவது அரசியலில் இருக்கலாம் என முடிவெடுத்து அவர் எம்.எல்.சி ஆக்கப்பட்டார். நான் திருப்பனந்தாளில் தம்பிரானாக இருந்தபோது கருணாநிதி, கோ.சி.மணி மூலம் எனக்கும் பதவி கொடுப்பதற்காக வந்து கேட்டார்கள்.
கடவுளையே கை காட்டி நின்ற ஞானசம்பந்தரின் வாரிசுகள், சட்டசபை சபாநாயகர் முன் கைகட்டி பதில் சொல்லும் நிலை வேண்டாம் என்று எழுதியே அனுப்பினேன். கருணாநிதி அதைப் பார்த்து வியந்து பாராட்டினார். இவ்வாறு தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
-
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
எனக்கு ஒன்னு.. என் மகனுக்கு ஒன்னு.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக அமைச்சர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
பெண்களிடம் தவறாக பேசினேனா? வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட் தொடர்பாக ராஜீவ் காந்தி விளக்கம்! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications