என் கேள்விக்கு என்ன பதில்...அசர வைக்கும் திமுக எம்.பி...திணறும் அதிகாரிகள்
சென்னை: சாலைப்பணிகள் தொடர்பாக தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறினர்.
தருமபுரி திமுக எம்.பி.செந்தில்குமார் தொகுதி முழுவதும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதால் அரசு அதிகாரிகள் திகில் அடைந்துள்ளனர். மக்களிடம் வரும் புகார்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக களத்தில் குதித்து அதற்கான தீர்வை ஏற்படுத்தி தருகிறார் செந்தில்குமார் எம்.பி. மேலும், மாதந்தோறும் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை தயார் செய்து அதை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார்.+

இப்படி படு சுறுசுறுப்பாக இயங்கி வரும் செந்தில்குமார் எம்.பி.யிடம் அயோத்தியாப்பட்டணம் முதல் பள்ளிப்பட்டு வரையிலான சாலை பழுதடைந்து நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக பொதுமக்கள் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து நெடுஞ்ச்சாலைத்துறை அதிகாரிகளை நிகழ்விடத்திற்கு வர வைத்து கேள்விகளால் குடைந்தெடுத்து விட்டார்.
35 கி.மீ.சாலைப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு 7 மாதங்களாகியும் ஒப்பந்தக்காரர் பணியை தொடங்காதது ஏன் என செந்தில்குமார் எம்.பி.வினவினார். அதை பற்றி தமக்கு தெரியாது எனவும், அடுத்த வாரத்தில் பணியை தொடங்குவார் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அலட்சிய பதில் அளித்தார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற செந்தில்குமார், ஒப்பந்ததாரருக்கு போன் போடச் சொல்லி, எப்போது பணியை தொடங்கி எப்போது முடிப்பீர்கள் என்பதை கூற வேண்டும் கிடுக்கிப்பிடி போட்டார்.

இதனால் வேறு வழியின்றி வரும் புதன்கிழமை பணியை தொடங்குவதாக நெல்லையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற ஒப்பந்ததாரர் செந்தில்குமாரிடம் உறுதியளித்தார். செந்தில்குமாரின் ஆக்ஷனை திமுகவினர் மட்டுமல்லாமல் அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினரும் பாராட்டினர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications