ஓ.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடா? புன்னகையுடன் தர்மர் சொன்ன பதில்! இதை யாரும் எதிர்பார்க்கல
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான தர்மர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அணி மாறுகிறீர்களே.. ஏதும் பஞ்சாயத்தா? கருத்து வேறுபாடா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு தர்மர் சொன்ன பதில், கவனம் பெற்றிருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகளில் முக்கிய தலைகள் இணைவதும், நீங்குவதுமாக களம் பரபரப்பாகியிருக்கிறது. அந்த வகையில் இன்று, களத்தை பரபரப்பாக்கியவர்தான் தர்மர்.

யார் இந்த தர்மர்
கடந்த 2022ம் ஆண்டுதான் தர்மர் வாழ்க்கையில் ஒளி வெளிச்சம் வந்தது. அதுவரை அதிமுகவில் சாதாரண ஒன்றிய செயலாளராகத்தான் இருந்தார் தர்மர். முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராகவும் பணியாற்றியிருந்த தர்மர், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்தார். அப்போது எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே முட்டல் மோதல்கள் இருந்தன. அப்போது நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 2 சீட்கள் நிச்சயம் அதிமுகவுக்கு கிடைக்கும் சூழல் இருந்தது.
காலியான கூடாரம்
எனவே ஒரு சீட், ஒபிஎஸ்-க்கு கொடுக்கப்பட்டது. இதனை தனது ஆதரவாளரான ஆர்.தர்மருக்கு கொடுத்தார் ஓபிஎஸ். இப்படித்தான் தர்மர் எம்பியானார். அப்புறம் என்ன ஜூலையில் நடந்த மாநாட்டில் ஓபிஎஸ் நீக்கப்பட.. அன்று முதல் தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராக மாற்றிக்கொண்டார் தர்மர். எனவே எடப்பாடி டீமிடம் பெரியதாக டச் இல்லை. இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்கள் ஓபிஎஸ் அணியில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
இரண்டாம் கட்ட தலைவர்கள்
அதாவது, ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் என பெரும் தலைகள்.. அப்படியே திமுகவில் ஐக்கியமாகினர். ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் திமுகவுக்கு செல்வார் என்று சலசலப்புகள் எழ.. அவரை நம்பியிருந்த இரண்டாம் கட்ட தலைகள் தெறித்தனர். இப்படியாகத்தான் தர்மர் தற்போது எடப்பாடி தலைமைக்கு கீழ் வந்து சேர்ந்திருக்கிறார்.
மனக்கசப்பா?
இத்தனை காலம் ஓபிஎஸ் தான் எல்லாம் என்று இருந்தீர்களே! திடீரென எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்? ஏன் இந்த மாற்றம்? உங்களுக்கும் ஓபிஎஸ்-க்கும் மனக்கசப்பா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப.. சிரித்துக்கொண்டே.. எனக்கு யாருடனும் மனக்கசப்பு கிடையாது என்று சொல்லி.. அடுத்த கேள்விக்கு இடம் கொடுக்காமல் நழுவிக்கொண்டார்.












Click it and Unblock the Notifications