Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் வீட்டுகிட்டயே இந்த அக்கிரமம்.. திமுக போட்ட கள்ள ஓட்டு? புட்டு புட்டு வைத்த தமிழக பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக கொந்தளித்துள்ளது. இது தொடர்பான புகார் ஒன்றையும் தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று, வேலியே பயிரை மேய்வதா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

விறுவிறுப்பான நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தநிலையிலும்வட, தமிழகத்தில் அதன் பரபரப்புகள் இன்னமும் அடங்கவில்லை... பதிவான ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் கடந்தமுறை தேர்தலைவிட குறைவு என்றே கூறப்படுகிறது.. இதற்கான சில காரணங்களையும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Did DMK MLA attack Tamil Nadu BJP Member in Chennai and Sr Leader Narayanan Thirupathy complaint against DMK

இதற்கு நடுவில், அரசியல் கட்சிகள், ஒருவருக்கொருர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது.. அந்தவகையில், திமுக மீது பாஜக முக்கிய குற்றச்சாட்டை வைத்துள்ளது.

அதிருப்தி: அதாவது, சென்னையில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதுடன், பாஜகவின் கிளை முகவராக பணியாற்றியவர் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதாக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:

"வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தமிழக முதல்வரின் இல்லத்திற்கு அருகிலேயே வாக்கு சாவடியை கைப்பற்றி கள்ள வாக்குகளை பதிவு செ‌ய்து‌ள்ளன‌ர். திமுகவினர் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில், தேனாம்பேட்டை 122 வது வட்டம் வாக்கு சாவடி எண் 13 ல் பாஜகவின் கிளை முகவராக பணியாற்றிக் கொண்டிருந்த கெளதம் என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளைஞரை வாக்குச்சாவடிக்குள் புகுந்து தாக்கியுள்ளதோடு, வாக்குச் சாவடியை கைப்பற்றி கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளது அறிவாலய கு‌ம்ப‌ல்.

கராத்தே தியாகராஜன்: தகவலறிந்து பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்தும், திமுகவின் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் அழுத்தத்தினால் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வன்முறைக் கும்பலுக்கு ஆதரவாக பேசியதோடு, பாஜகவின் கெளதம் ஜாதி ரீதியாக பேசினார் என்ற உண்மைக்குப் புறம்பான தகவலை பொது வெளியில் கூறியுள்ளார் மயிலை வேலு அவர்கள்.

திமுகவின் அராஜக செயலை மூடி மறைக்க ஜாதிய மோதலை உருவாக்க முனைகிறார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர். பாதிக்கப்பட்ட கெளதம் ம‌ற்று‌ம் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனின் தலைமை முகவர் கரு.நாகராஜ் அளித்துள்ள புகாரின் மீதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

கோரிக்கை: மேலும், பாஜக நிர்வாகி, கெளதமை தாக்கிய திமுக குண்டர்கள் மீதும், அவர்களுக்கு துணை நின்றதோடு 'ஜாதி' ரீதியான கலவரத்தை தூண்ட முனைந்த குற்றத்திற்காக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாரயணன் திருப்பதி கேட்டுக் கொண்டுள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+