அண்ணாமலையை ராஜினாமா செய்ய வைக்க.. ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.. இப்படி ஒரு பிளானா.. சொன்னது யாரு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையை ராஜினாமா செய்ய வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் ஸ்கெட்ச் போட்டார். அண்ணாமலையை தூக்க போகிறார்கள். இதற்கு பின் எடப்பாடிதான் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்துள்ளார்.. அவரின் திட்டபடியே சில விஷயங்கள் நடந்து உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. வரும் சில நாட்களில் அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன. தலைவர் மாற்றம் உறுதியாகிவிட்டது என்றே நம்மிடம் பேசி பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனை நடந்து உள்ளது. ஆனால் நியமிக்கப்பட போவது தற்காலிக தலைவரை.. நிரந்தர தலைவரா என்பது தெரியாது, என்றெல்லாம் செய்திகள் வர தொடங்கி உள்ளன.

annamalai

ஒரு மூத்த பெண் நிர்வாகியின் பெயர் தலைவர் பதவிக்கு அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அவர் மீது டெல்லி பாஜகவிற்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. ஆனாலும் அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் டெல்லி உள்ளது. அண்ணாமலை மாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவில் என்ன நடக்கிறது.. அண்ணாமலை மாற்றப்படுவாரா என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பேட்டி; இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவில் நிலைமை சரியில்லை. சமீபத்தில் கைதான ப்ரித்வி உட்பட பலர் அண்ணாமலைக்கு நெருக்கம். இவர்கள் காரணமாக அண்ணாமலை மீது டெல்லி மீது அப்செட்டில் உள்ளது.

அதிமுக கூட்டணி; அதிமுக கூட்டணியை அண்ணாமலை உடைத்ததை பாஜக விரும்பவில்லை. பாஜக மேலிடம் இதை ரசிக்கவில்லை. கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசி பேசி கூட்டணியை உடைத்ததை பாஜக விரும்பவில்லை. பாஜகதான் பெரிய கட்சி.. தனியாக ஆட்சி அமைக்கும் என்று சொல்லலாம். அதற்காக அதிமுகவை எதிர்க்கலாமா?

சசிகலா பிளான் படி அண்ணாமலை இப்படி செய்துள்ளார. அதிமுக கூட்டணியை உடையுங்கள் என்று சசிகலா கூறினார். எடப்பாடியை பலவீனப்படுத்த வேண்டும் என்று சசிகலா கூறினார். இதை அண்ணாமலை ஏற்றுக்கொண்டார். சசிகலா கேட்டுக்கொண்டதற்காக அண்ணாமலை அதிமுக கூட்டணியை உடைத்துவிட்டார்.

பாஜக சசிகலா இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. அண்ணாமலை டெல்லியை ஏமாற்றிவிட்டார். பொய்யான உளவுத்துறை ரிப்போர்ட்டை கொடுக்க வைத்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்ததாக பொய்யான உளவுத்துறை ரிப்போர்ட்டை கொடுக்க வைத்துள்ளார்.

இதை டெல்லி கண்டுபிடித்துவிட்டது. இதுதான் பாஜகவின் மேலிடம் கோபம் அடைய காரணம். கூப்பிட்ட போதெல்லாம் மோடி, அமித் ஷா தமிழ்நாடு வந்த காரணம் இந்த நம்பிக்கதான்.. ஆனால் அதை அண்ணாமலை ஏமாற்றிவிட்டார். நயினாருக்கு டெல்லியில் ஆதரவு உள்ளது.

எடப்பாடிதான் ஸ்கெட்ச் போட்டு அண்ணாமலைக்கு எதிராக பிரஷர் போட்டுள்ளார். தேர்தல் வியூகத்தில் எடப்பாடி சிறப்பாக செயல்பட்டு உள்ளார். அண்ணாமலையை விட எடப்பாடி சிறப்பாக செயல்பட்டு உள்ளார், என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+