ரஜினி இ-பாஸ் விவகாரம் - ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி
ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்காமல் கேளம்பாக்கத்திற்கு சென்றிருந்தால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா இல்லையா என்ற விவகாரம் அவரை விடாது விரட்டி வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக ஒன்றரை லட்சம் பேருக்கு சரியான ஆவணம், காரணம் ஆகியவற்றின் அடிப்படையில் இ- பாஸ் வழங்கியுள்ளோம். அந்த ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர்தான் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா? இல்லையா என்று தெரியவரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து காரில் செல்லும் போட்டோ ஒன்று இரு தினங்களுக்கு முன்பு வைரலானது. லைன் இன் லம்போர்கினி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினிகாந்த் எங்கே போனார் என்று பலரும் கேட்டனர். அதற்கு விடை இரவில் கிடைத்தது.

போயஸ்கார்டன் பங்களாவில் பல மாதங்கள் தங்கியிருந்ததால் ஒரு மாற்றத்திற்காக கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் மகள், மருமகன், பேரனுடன் ஓய்வெடுக்க போயிருக்கிறார் ரஜினி. இதற்குத்தான் காரில் மாஸ்க் போட்டுக்கொண்டு காரில் போயிருக்கிறார்.
கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினிகாந்த் அவ்வப்போது வாக்கிங் போகும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. இப்போது ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு போக இ பாஸ் வாங்க வேண்டும். இது பற்றிய சர்ச்சையில் ரஜினிகாந்த் சிக்கியிருக்கிறார்.
ரஜினி சென்னை மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீடு அமைந்துள்ள கேளம்பாக்கத்துக்கு போக இ பாஸ் வாங்கியிருக்கிறாரா என்று சென்னை மநகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரகாஷ், அது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
இ - பாஸ் வேண்டி மொத்தம் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், ஒன்றரை லட்சம் பேருக்கு சரியான ஆவணம், காரணம் ஆகியவற்றின் அடிப்படையில் இ- பாஸ் வழங்கியுள்ளோம். அந்த ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர்தான் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா? இல்லையா என்று தெரியவரும் என்று தெரிவித்தார்.
இன்றும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் தனது பெயரிலோ அல்லது டிரைவரின் பெயரிலோ இ பாஸ் வாங்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். காரில் போகும் போட்டோவை போட்டு ட்ரெண்ட் ஆக்கிய ரஜினிகாந்த். இப்போது இ பாஸ் விவகார சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! 1 இட்லி, வடைக்கான பில்லில் கேஸ் பயன்பாட்டு தொகையும் சேர்ப்பு! -
அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியதே திமுக தான்.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!











Click it and Unblock the Notifications