சொத்து பத்திரம்.. அதைவிடுங்க, கொடநாடு பங்களாவில் "வெள்ளை கொடி"யோடு நுழைஞ்ச விஐபி யாருங்க? பலே சசிகலா
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுக களம் சூடுபிடிக்கிறது. அத்துடன், சசிகலாவின் நடவடிக்கைகளும் வேகம் எடுத்துள்ளன.. இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் சசிகலா அன்று முதல் இன்றுவரை உறுதியாக இருந்து வருகிறார். இதற்கு காரணம், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே லட்சியம்தான். அதனால்தான், இப்போதுவரை, அதிமுக தலைவர்களை பற்றி ஒருவார்த்தைகூட கடுமையாக விமர்சிக்காமல் உள்ளார்.. யாரையும் கடிந்துகூட பேசாமல் இருக்கிறார்.

பழைய சசிகலா: இதுவே பழைய சசிகலாவென்றால், அவரது அணுகுமுறையே அதிரடியாக இருந்திருக்கும். 30 வருடம் அதிமுகவில் லாபி செய்தவர், இந்த 3 வருடங்களாகவே மென்மையான அரசியலை கையில் எடுத்து வருவது பலரையும் கவனிக்க வைத்தது.. தன்னை சந்திக்க வேண்டும் என்று பலவழிகளில் முயற்சித்து கொண்டிருக்கும் ஓபிஎஸ்ஸை இதுவரை சந்திக்காமல் உள்ளதே இதற்கு சாட்சி.
அதனால்தான், எடப்பாடி பழனிசாமி நடத்திய மதுரை மாநாட்டுக்கும் போகவில்லை, ஓபிஎஸ் நடத்திய திருச்சி மாநாட்டுக்கும் போகவில்லை. இதற்கு காரணம், அனைவருமே ஒன்று சேர்ந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்பதுதான்.. அதுமட்டுமல்லாமல், சாதி முத்திரை தன்மீது எந்தரூபத்திலும் விழுந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்து வருகிறார்.
டிடிவி தினகரன்: தினகரனுடன் இந்த நிமிடம்வரை இணையாமல் இருப்பதற்கும் இதுவே காரணமாக உள்ளதாக தெரிகிறது. அத்துடன், எடப்பாடி பழனிசாமியுடன் திவாகரனும் நெருக்கமாக இருந்து வரும்நிலையில், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தில் கறாராக இருந்து வருகிறார் சசிகலா. அன்று மூத்த தலைவர் வைத்திலிங்கம் வீட்டு விசேஷத்தில், சசிகலா கலந்து கொள்ளவில்லை என்றபோதே, இது எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவாகவும் பார்க்கப்பட்டது.
இதற்கு பிறகு பாஜகவுடனான கூட்டணியை முறித்ததாக அதிமுக அறிவித்ததுமே, அதிமுக மூத்த தலைவர் முனுசாமிக்கு போனை போட்டு பேசினாராம் சசிகலா..
முனுசாமி: "என்,.டி.ஏ. கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய முடிவு பாராட்டுதலுக்குரியது. பழனிச்சாமியிடம் ஃபோனை கொடுக்க முடியுமா?" என்று சசிகலா கேட்டதுமே, எடப்பாடியிடம் ஃபோனை கொடுத்துள்ளார் முனுசாமி.
ஃபோனை எடப்பாடி வாங்கியதும், அவரிடமும், தற்போது எடுக்கப்பட்ட முடிவுக்கு வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார் சசிகலா. வாழ்த்து சொல்லி விட்டு, உடனே ஃபோனை துண்டித்துக்கொண்டாராம். ஆனாலும், சசிகலா ஃபோன் செய்ததை எடப்பாடி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.. எனினும், சசிகலாவுடன் போனில் பேசியதாக சொல்லப்பட்டது, எடப்பாடியின் பிடிவாதம் ஓரளவு தளர்ந்ததாகவே பார்க்கப்பட்டது.
அதிருப்தி: இப்படியெல்லாம் செய்திகள் கசிந்து வந்தநிலையில், நிஜமாகவே இவர்கள் இருவருக்குள்ளும் அதிருப்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.. அதுகுறித்துதான் தற்போது பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
அண்மைக்காலமாகவே எடப்பாடியிடம் நட்பாக இருந்து வருகிறாராம் சசிகலா. எடப்பாடியும் சசியை எதிர்த்துகொள்ள வேண்டாம் என்ற மனநிலையில் சில டீலிங்குகள் நடத்தியிருக்கிறார். கொங்கு பக்கம் உள்ள மாஜி அமைச்சர் ஏற்பாட்டிலேயே இந்த நட்பு உருவானதாக சொல்கிறார்கள்..
மாஜி தூது: அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் மாஜி அமைச்சரின் தூதுவர் ஒருவரை கொடநாட்டில் சசிகலா சந்திக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.. அரசியல் ரீதியாக ஃபைனல் டீலிங் இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்கிறார்கள்.. இந்த சந்திப்புக்காகவே சசிகலா கொடநாட்டிற்கு விசிட் அடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், கொடநாட்டுக்கு சசிகலா சென்றதில் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, 480 கோடி ரூபாயை கட்டிவிட்டதால், முடக்கப்பட்ட சசிகலாவின் சொத்துக்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டன. அதில் கொடநாடு சொத்தும் ஒன்று.
எது உண்மை: அதனால்தான் கொடநாடு சென்று முக்கியமானவைகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா ? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த கொடநாடு கொள்ளை சம்பவத்தில் என்னென்னவெல்லாம் திருடு போனது? என்பதையெல்லாம் ஆராய்வதற்காகவே கொடநாடு சென்றதாக சிலர் சொல்கிறார்கள். இந்த 2 காரணங்களில் எது உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், சசிகலாவின் அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது கவனிக்கத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications