ஆமா.. அதிமுக எம்எல்ஏக்கள்தான்.. இத்தனை கேமரா முன்னாடி எப்படி சொல்ல முடியும்.. இபிஎஸ்ஸுக்கு சசி ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களுடன் பேசி வருகிறீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சசிகலா சொன்ன பதில் என்ன தெரியுமா?

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவ்வப்போது அதிமுக தொண்டர்களை சசிகலா சந்தித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நேற்றைய தினம் சசிகலா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

யாரையும் பிரித்து பார்க்கவில்லை

யாரையும் பிரித்து பார்க்கவில்லை

நான் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. தமிழக காவல் துறையை பொருத்தமட்டில் நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களை சரியாக கவனித்து நடத்த வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

கட்சியை சேர்ந்தவர்கள்

கட்சியை சேர்ந்தவர்கள்

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி பொறுப்பில் இருப்பார்கள். தேர்தல் என்பது வேறு. அரசாங்கம் என்பது வேறு. நாம் அனைவரும் வரி செலுத்துகிறோம். அதனால் நாம் அனைத்தையும் கேட்டு பெறுவதற்கு 100 சதவீத உரிமை இருக்கிறது. இதுதான் நம் தலைவர்கள் பின்பற்றிய வழியும் கூட.

மத்திய அரசு ஓபிஎஸ்

மத்திய அரசு ஓபிஎஸ்

மத்திய அரசிடம் இருந்து எதையும் கேட்டுப் பெறவே மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசை விமர்சிப்பது வேறு. தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார் சசிகலா. அவரிடம் ஓபிஎஸ்ஸை நீங்கள் எப்போது சந்திப்பீர்கள் என நிருபர்கள் சசிகலாவிடம் கேள்வி எழுப்பினர்.

ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும்

ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும்

அதற்கு அவர் கூறுகையில் இதை நீங்கள் ஓபிஎஸ்ஸிடம்தான் கேட்க வேண்டும் என்றார். அதிமுக எம்எல்ஏக்களுடன் நீங்கள் பேசி கொண்டு இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு சசிகலா பதில் அளிக்கையில் இத்தனை கேமரா முன்னால் அதை எப்படி உங்களிடம் சொல்ல முடியும்? என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள்

அதிமுக எம்எல்ஏக்கள்

இதன் மூலம் சசிகலா மாஜி அமைச்சர்கள் மட்டுமின்றி தற்போதைய எம்எல்ஏக்களிடமும் பேசி வருவது தெரிகிறது. அதை அவர் மறுக்கவே இல்லை. சசிகலா யாருடன் பேசினாலும் யாரை சந்தித்தாலும் கவலை இல்லை என கூறும் எடப்பாடி தரப்பு சசிகலாவின் இந்த பேச்சை கேட்டுவிட்டு ஆடி போய்விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+