Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருத்தணி கோயிலுக்குள்.. மாஸ்குடன் விறுவிறுன்னு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. அடுத்து செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் பச்சை நிறத்தினால் ஆன பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2012ல் தனுஷை வைத்து இயக்கிய 3 படத்தின் மூலம் சினிமா இயக்குனராக அறிமுகம் ஆனார். அதற்கு முன்னதாகவே அவர் 2003ல் விசில் திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேலே ஆசை தான் பாடலை பாடியிருக்கிறார்..

Director Aishwarya Rajinikanth had darshan of sami in Tiruttani Murugan Temple

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஸ்டார் விஜய்யின் நடனப் போட்டியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் நடிகர்கள் சங்கீதா மற்றும் ஜீவாவுடன் நடுவராக இருந்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷை பிரிவதாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் தீவிர பற்றுக்கொண்டவர். அடிக்கடி கோயில்களுக்கு சென்று வருகிறார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு இன்று வந்தார். அவர் கோயிலுக்குள் நுழையும் போது மாஸ்க் அணிந்தபடி உள்ளே வந்தார்.

பின்னர் சுவாமியை தரிசனம் செய்யும் போது மாஸ்கை கழட்டிய அவர், பின்னர் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடியபடி முருகனை பிராத்தித்தார். அதைதொடர்ந்து அவருக்கு கோயில் ஊழியர்கள், பச்சை நிறத்தினாலா பொன்னாடை அணிவித்ததுடன், கோயில் பிரசாதங்களை வழங்கினார்கள். தொடர்ந்து புறப்பட்டு செல்லும் முன்பு கோயில் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். தொடர்ந்து அவர்களுடன் செல்பி எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மறுபடியும் மாஸ்க் அணிந்து கொண்டு கோயிலை விட்டு வெளியேறி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+