சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு இந்தி தெரியவே தெரியாது! இந்தி எனது திறமையை விட முக்கியமில்லை! பா.ரஞ்சித் பரபர பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை : இந்தி மொழித் திணிப்பு என்பதை எந்த காலத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, எனக்கு இந்தி தெரியவே தெரியாது என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் ஆகியோர் ட்விட்டரில் இந்தி தேசிய மொழியா என்பது குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

இந்தி மொழி பிரச்சினை அரசியல் என்பதை தாண்டி சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக பலரும் புகார் கூறி வரும் நிலையில், எனக்கு இந்தி தெரியவே தெரியாது இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இந்திய இணைப்பு மொழி தமிழ்; இந்திய அளவில் திராவிடர்களாக ஒன்றுபடுவோம்: இயக்குநர் பா.ரஞ்சித் இந்திய இணைப்பு மொழி தமிழ்; இந்திய அளவில் திராவிடர்களாக ஒன்றுபடுவோம்: இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ரஞ்சித் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்," திரைத்துறை என்பது அதிக அளவில் வணிகரீதியாக இயங்குவதால் நிறைய பிரச்சனைகள் இருந்தது. இருக்கிறது. அதை சந்தைப்படுத்துவது முதலீடு செய்வது என்பது அதிகார வர்க்கமாக இருந்த சமயத்தில், தலித் மக்களின் வாழ்க்கை குறித்த பேசுவதில் ஆரம்ப காலகட்டத்தில் சில சிக்கல்கள் இருந்தது.

பயம் இருந்தது

பயம் இருந்தது

முதலில் இது போன்ற படங்களை எடுத்தால் மக்கள் பார்ப்பார்களா இல்லையா வணிகரீதியாக நம்மால் வெற்றி அடைய முடியுமா என்ற பயம் இருந்தது. ஆனால் அந்த பயம் கடந்த பத்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. தலித் மக்களின் வாழ்க்கையை ஏராளமானோர் படமாக எடுத்து இருக்கின்றனர்..எடுக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்தி தெரியாது

இந்தி தெரியாது

மிகவும் வெளிப்படையான தலித் மக்கள் பேசும் வாழ்க்கையை எடுக்க முடியாவிட்டாலும் அதை சார்ந்த படங்கள் வெளிவருகிறது. இந்தி மொழித் திணிப்பு என்பதை எந்த காலத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு இந்தி தெரியவே தெரியாது. ஆனால் ஆங்கிலம் தெரியும். ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தி மற்ற மொழிகளில் என்னால் திரைப்படத்தை எடுக்க முடியும் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

Recommended Video

    Sudeep VS Ajay Devgan Controversy | Sudeep-க்கு குவியும் தலைவர்களின் ஆதரவு | Oneindia Tamil
    திறமை இருக்கிறது

    திறமை இருக்கிறது

    இந்தி எனக்கு தெரியவில்லை என்பதற்காக எனக்கு வேலை வாய்ப்பு அல்லது ஒரு திரைப்படத்தை என்னால் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது இல்லை. எனக்கு திறமை இருக்கிறது எனது திறமை இந்தியை விட முக்கியத்துவம் பெற்றது இல்லை. தமிழ் தேசியம் பேசுபவர்கள் திராவிடத்தை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என ரஞ்சித் கூறினார்.

    English summary
    "I can not accept the Hindi language dump at any time," said director Pa. Ranjith.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X