திருமாவளவன் மீது எனக்கு எப்போதுமே பொறாமை உண்டு! இயக்குநர் ரஞ்சித் ஓபன் டாக்!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் மீது தனக்கு எப்போதுமே பொறாமை உண்டு என இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் திருமாவளவன் பற்றி இயக்குநர் ரஞ்சித் பேசியதாவது;

" பல தலைவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மக்களுக்காகத் தனது வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப முக்கியமானது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து தூங்குவது வரை, மக்களுக்காகவே பேசி, அவர்களுக்காகவே சிந்தித்து, அவர்களின் நலன்களை பற்றி யோசித்து தன்னுடைய நலன்களை கூட பார்க்காமல் இருக்கிறார் அண்ணன் திருமா. அவர் மேல் ஒரு பொறாமை கூட உண்டு. ஏனென்றால் நான் ஒரு வித்தியாசமான வாழ்க்கை முறை வாழ்கிறேன். இலக்கிய தளத்திலிருந்து சினிமாவில் இயங்குகிறேன்.''
'' எனக்கு சில விருப்பங்களும், ஏக்கங்களும் இருக்கின்றன. கலையின் வழியால் என்னை அறிந்து கொண்டேன். அதே கலையின் வழியாக நான் யார் என்பதை சொல்ல வேண்டும் என தோன்றியது. ஆனால் திருமா அண்ணன் தேர்ந்தெடுத்த செயல் வடிவம், தன் மக்களுக்காக தன்னை ஒப்புவித்தல் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. அந்த பொறாமை எப்போதுமே அண்ணன் மேல் உண்டு. எல்லாராலும் அது செய்ய முடியாது. அப்படியிருந்ததினால் தான் வெல்லும் ஜனநாயகம் என்ற மிகப்பெரிய மாநாட்டை நடத்தி பல லட்சம் மக்களை திரட்டியிருக்கிறார்.''
''இந்தியாவே அசந்து போகிற அளவிற்கு இளைஞர்களை திரட்டியுள்ளார். அந்த காட்சியை பார்க்கும் போது நமக்கே ஒரு எழுச்சி வருகிறது. டாக்டர்.அம்பேத்கர், பௌத்தத்தை தழுவிய போது அவ்வளவு பெரிய கூட்டத்தை உருவாக்கினார். அந்த கூட்டத்திலும் இந்த கூட்டத்திலும் எங்கேயுமே எந்த வன்முறையும் அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்து, மிகப்பெரிய கூட்டம், படை எங்களிடமும் இருக்கு, நாங்கள் சாதாரண ஆள் கிடையாது. அதே சமயம் கட்டுப்பாடாக இருக்கிறோம். எங்களுக்கென்று பண்பாடு இருக்கு, அது ஒடுக்குமுறையை எதிர்க்கிற பண்பாடு என இந்திய தமிழக அரசியலில் ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார். ''
''சினிமா திரைப்படங்களில் வரும் மாஸ் காட்சி போல நிகழ்த்தி காட்டினார். தன்னை பற்றி யார் பாராட்டுவார்கள், தூற்றுவார்கள், யார் கூட நிற்பார்கள், நிற்கமாட்டார்கள் என நினைக்காமல் கட்சி மீதும் மக்கள் மீதும் இருக்கிற அன்பும் மன உறுதியும் தான் அண்ணனை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கு. அவர் எடுத்திருக்கிற இன்னொரு முடிவு தேர்தலில் பானை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பது.
அது ரொம்ப முக்கியமானது. அவர் போட்டியிடுகின்ற தொகுதிகளிலும் அண்ணன் மிகப் பெரிய வெற்றியடைய நாம் ஆதரவாக நிற்க வேண்டும்"
-
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications