தேர்தல் வருது.. தேர்வுகளை சீக்கிரம் முடிங்க.. பள்ளிகளுக்கு கல்வித் துறை திடீர் உத்தரவு
சென்னை: மக்களவைத் தேர்தல் வருவதால் பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடித்துவிடுமாறு பள்ளி கல்வித் துறை திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நேரம் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நேரம் ஆகும். பொதுவாக தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வாக்குச் சாவடிகளாக மாறும் பள்ளிகளை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
[ ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019 ]
அதன்படி 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் 11-ஆம் தேதி ஒப்படைக்கப்பட வேண்டும். இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் 12- ஆம் தேதிக்குள் பள்ளித் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கடைசி வேலை நாள் ஏப்ரல் 12-ஆக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications