பழிவாங்கிய ஜெயலலிதா.. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி தரப்பு உயர்நீதிமன்றத்தில் பரபர வாதம்
சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்த வழக்கு என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டது என பொன்முடி தரப்பில் பரபரப்பான வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் இதற்கு முன்பு மறைந்த திமுக முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது பொன்முடி கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இந்த சமயத்தில் பொன்முடி 1 கோடியே 36 லட்சம் அளவுக்கு வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த 2002ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு என்பது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதையடுத்து அந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வேலூர் நீதிமன்றம் வழக்கை விசாரித்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி வசந்த லீலா கடந்த ஜூன் மாதம் வழங்கினார்.
இதனால் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி தரப்பு வாதங்களை முன்வைக்க உயர்நீதிமன்றம் கூறியது. இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணை நடந்தது. அமைச்சர் பொன்முடி தரப்பில் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வாதம் செய்தார். அப்போது அவர், ‛‛விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதால் தான் உயர்நீதிமன்றம் இதனை தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. ஆனால் நீதிமன்றத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எங்கள் தரப்பில் வைக்கப்படவில்லை.
மேலும் வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றும்போது கருத்து கூட கேட்கப்படவில்லை. அதோடு வேலூர் நீதிமன்ற நீதிபதி 4 நாளில் தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த வழக்கை 9 மாதங்கள் விசாரணை நடத்தினார். அதோடு அரசியல் எதிரிகள் யாரோ எழுதிய கடிதத்தால் தான் விழுப்புரத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை பதிவுத்துறை எங்களிடம் வழங்க வேண்டும்'' என்றார்.
இதனை கேட்ட நீதிபதி நிர்வாக ரீதியாக இப்போது எதையும் கூற முடியாது. மனுவாக தாக்கல் செய்யுங்கள். பார்க்கலாம் என்றார். இதையடுத்து மீண்டும் என்ஆர் இளங்கோ வாதம் செய்தார். அப்போது, ‛‛சட்டசபையில் பொன்முடியின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெயலலிதாவால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து பொன்முடிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‛இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்'' என்றார். இதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். அதாவது எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை வேகமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி மறுத்தார்.
அதன்பிறகு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதி கேட்டார். அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛வேலூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்து வருகிறோம். அதற்குள் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரிக்கிறது'' என்றார். இதை கேட்ட உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனக்கூறி நவம்பர் 27 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications