கனமழை எதிரொலி.. 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Recommended Video

சென்னை: கனமழை காரணமாக இன்று 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அதன் ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா மாவட்டங்களில் பெய்து வருகிறது.

ஏற்கெனவே கஜா புயலில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவே இல்லை. இதில் மேலும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதனால் அவ்வப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருச்சி, தஞ்சை, தருமபுரி, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை என்றாலும் ஒரு சில தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
இதையடுத்து இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும், தஞ்சை, தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.












Click it and Unblock the Notifications