நெருங்கும் புயல்.. அச்சுறுத்தும் சூறைக்காற்று! சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து
சென்னை: டிட்வா புயல் இலங்கையை கடந்து தற்போது தமிழக கடலோர பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் நாளை சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையிலிருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரைக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு வரும் மற்றும் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் என மொத்தம் 54 விமானங்களின் இயக்கம் நாளை ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை மதுரை, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, சேலம், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்களாகும். நாளை காலை முதல் இரவு வரை ஷெடுல் செய்யப்பட்ட இந்த விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களும் ATR ரகத்தைச் சேர்ந்தவை. இந்த வகை விமானங்கள் கடுமையான புயல் காற்று மற்றும் பலத்த மழை போன்ற மோசமான வானிலைக்கு அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவை.
இந்த வகை விமானங்கள் குறைந்த உயரத்தில், அதாவது 25,000 அடி உயரத்திற்கும் கீழேதான் பறக்கும். இதனால் மழை மேருங்கள், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களில் இந்த விமானம் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதேபோல புயல் மற்றும் மழைக்காலங்களில் உருவாகும் மிக கடுமையான காற்றை இந்த விமானங்களின் இன்ஜின்களால் சமாளிக்க முடியாது. இந்த விமானங்கள் எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, குறைந்த திறனுடன் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் உள்நாட்டு நகரங்களை இணைப்பதற்காகவே இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் திறன் குறைவு என்பதாலும், புயல் காற்றை சமாளிக்கும் அளவிற்கு இருக்காது என்பதாலும், இந்த வகை விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
விமான நிலைய அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், "இத்தகைய மோசமான வானிலையில் ATR விமானங்களை இயக்குவது ஆபத்தானது. பயணிகளின் நலனையும், விமானங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 54 ரத்து செய்யப்பட்ட விமானங்களைத் தவிர, நிலைமையைப் பொறுத்து மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம். எனவே, பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், தங்களது விமான நிலை குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications