நெருங்கும் புயல்.. அச்சுறுத்தும் சூறைக்காற்று! சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து
சென்னை: டிட்வா புயல் இலங்கையை கடந்து தற்போது தமிழக கடலோர பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் நாளை சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையிலிருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரைக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு வரும் மற்றும் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் என மொத்தம் 54 விமானங்களின் இயக்கம் நாளை ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை மதுரை, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, சேலம், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்களாகும். நாளை காலை முதல் இரவு வரை ஷெடுல் செய்யப்பட்ட இந்த விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களும் ATR ரகத்தைச் சேர்ந்தவை. இந்த வகை விமானங்கள் கடுமையான புயல் காற்று மற்றும் பலத்த மழை போன்ற மோசமான வானிலைக்கு அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவை.
இந்த வகை விமானங்கள் குறைந்த உயரத்தில், அதாவது 25,000 அடி உயரத்திற்கும் கீழேதான் பறக்கும். இதனால் மழை மேருங்கள், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களில் இந்த விமானம் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதேபோல புயல் மற்றும் மழைக்காலங்களில் உருவாகும் மிக கடுமையான காற்றை இந்த விமானங்களின் இன்ஜின்களால் சமாளிக்க முடியாது. இந்த விமானங்கள் எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, குறைந்த திறனுடன் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் உள்நாட்டு நகரங்களை இணைப்பதற்காகவே இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் திறன் குறைவு என்பதாலும், புயல் காற்றை சமாளிக்கும் அளவிற்கு இருக்காது என்பதாலும், இந்த வகை விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
விமான நிலைய அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், "இத்தகைய மோசமான வானிலையில் ATR விமானங்களை இயக்குவது ஆபத்தானது. பயணிகளின் நலனையும், விமானங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 54 ரத்து செய்யப்பட்ட விமானங்களைத் தவிர, நிலைமையைப் பொறுத்து மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம். எனவே, பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், தங்களது விமான நிலை குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்..!" கண்ணீர் மல்க பேசிய நடிகை தீபாவின் அப்பா... நேரில் ஆறுதல் கூறிய கீதா ஜீவன் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications