திரையில் டான்ஸ் ஆடுறவன் தலைவர் கிடையாது! தரையில் இறங்கி அடிக்கிறவர்தான்.. திவ்யா சத்யராஜ் பரபர பேச்சு
சென்னை: யோகி பாபு சார் கூட கியூட்டா இருக்கிறார். அதற்காக நாளைக்கு அவர் கட்சி ஆரம்பித்தார் என்றால் நான் அவர் மக்கள் பணி எப்படி செய்கிறார் என பார்த்துவிட்டு தான் ஓட்டு போடுவேன் என திவ்யா சத்யராஜ் கூறினார். மேலும் திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் தலைவர் கிடையாது.. தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர்.. என்றும் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
நடிகர் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசினார். திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-

திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் தலைவர் கிடையாது.. தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர்.. எவன் செத்தால் எனக்கு என்ன என்று படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மேடம் போல ஆபீஸ் ரூமில் இருந்து லாஜிக்கே இல்லாமல் ஸ்லோமோஷன் ல பேசுகின்றவர் தலைவர் கிடையாது.
அன்பில் மகேஷ் ஏன் அழுதார் என கேக்குறாங்க
துபாய் பயணத்தை கேன்சல் செய்துவிட்டு மக்களுக்காக ஓடி வந்தார் பாருங்க அவர் தான் தலைவர். கரூர் சம்பவத்தை பற்றி லாஜிக்கே இல்லாமல் புது கட்சியில் இருந்து வந்தவங்க சில கேள்விகளை கேட்டாங்க.. ஏன் செந்தில் பாலாஜி கரூர் சம்பவத்தின் போது ஆஸ்பத்திரிக்கு எப்படி உடனே வந்தார் என கேட்டாங்க.. அவருடைய எபிசென்சிய காண்பிக்கிறது.
ஏன் அன்பில் மகேஷ் அண்ணா அழுதார் என்று கேட்கிறாங்க.. ஏன் என்றால் அவருக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. ஏன் ஜோதிமணி மேடம் ஓடி வந்தார்கள்.. ஜோதிமணி மேம் ஓடி வந்தது அவங்களுக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது.
கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க..
சும்மா லாஜிக்கே இல்லாமல், நீங்க பெர்மிசன் கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என சொல்கிறார்கள். ஏன் எல்லாத்தையும் எங்க கிட்ட கேட்டா செய்யுறீங்க.. நாங்க என்ன பிரின்ஸ்பல்.. நீங்க எல்.கே.ஜி ஸ்டூடண்டா.. எல்லாத்தையும் எங்க பெர்மிசனோடு தான் பண்றீங்களா.. எனவே கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க..
காவல்துறை எதுக்கு இருக்காங்க.. நம்மளை பாதுகாக்கிறதற்கு.. ஆனால் காவல்துறை மீது பால் வீசுறுது.. மரத்து மேல ஏறுகிறது.. காவல்துறையை கடித்து வைக்கின்றது.. இதையெல்லாத்தையும் ஒரு தலைவர் கண்ட்ரோல் பண்ணனுமா வேண்டாமா.. ஆனால் லாஜிக்கே இல்லாம பேசுறாங்க..
யோகி பாபு கட்சி ஆரம்பித்தால்
நடிகர் யோகி பாபுவோட பெரிய பேன் நான்.. அவரை எவ்வளவு பிடிக்கும் என்று சொன்னால், எனக்கு யோகி பாபு சாரை கடத்துகின்ற அளவுக்கு பிடிக்கும். அதற்காக யோகி பாபு நாளைக்கு கட்சி ஆரம்பித்தார் என்றால்.. அவருக்கு உடனே நான் ஓட்டு போட்டுவிட மாட்டேன்.
அவர் நாளைக்கு மக்கள் பணி எப்படி செய்வார்? எந்த அளவுக்கு செய்வார்? என்பதை பார்த்து தான் ஓட்டு போடுவேன்.. யோகி பாபு சார் க்யூட்டா இருக்கிறார் என்பதற்காக நான் அவருக்கு ஓட்டு போட மாட்டேன்.. ஒரு ரசிகனுக்கும், ஒரு குடிமகனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதை நாம எல்லாரும் புரிஞ்சு வைத்துக்கிடனும் என நினைக்கிறேன்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன்












Click it and Unblock the Notifications