தீபாவளி.. சுவாசிக்கவே சிரமம்.. சென்னையில் மோசமான நிலையை அடைந்த காற்று மாசு! ஷாக் தந்த நம்பர்
சென்னை: தீபாவளியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு குறியீடு (AQI) 359ஐ எட்டியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஒருசில மாநிலங்களில் பண்பாட்டு வழக்கப்படி இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடும் பழக்கம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நேற்றே தீபாவளி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் விளைவாக, பட்டாசு வெடித்த காரணத்தால் காற்றின் தரம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. இவ்வாண்டும் அதேபோல சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 250க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலை மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. நீண்ட காலம் இந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.
சென்னையில் காற்று மாசு
சென்னையின் வேளச்சேரி பகுதியில் காற்றின் தரக்குறியீடு 301ஐ தொட்டுள்ளது, இது மிக மோசமான உடல்நலக் கேடு விளைவிக்கும் நிலையாகும். இப்பகுதிகளில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெருங்குடியில் 231 ஆகவும், செங்கல்பட்டில் 242 ஆகவும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. ஏற்கெனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.
புதுச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 243 ஆகவும், மதுரையில் 132 ஆகவும் பதிவாகியுள்ளது.
காற்றின் தரக்குறியீடு (AQI) வரம்புகள் இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளன:
0-50: இந்த வரம்பு சிறந்த காற்றின் தரத்தைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் குழந்தைகள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்குகூட எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
51-100: இந்த வரம்பு திருப்திகரமான காற்றின் தரமாகும். ஆனால், சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒருசில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.
101-200: மிதமான காற்றின் தரத்தைக் குறிக்கும் இந்த வரம்பு, காற்று அவ்வளவு நல்ல நிலையில் இல்லை என்பதைக் காட்டுகிறது. குழந்தைகள், வயதானவர்கள், மற்றும் ஏற்கெனவே நுரையீரல் கோளாறுகள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
201-300: இந்த வரம்பு காற்றின் தரம் மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. நீண்ட நாட்களுக்கு இந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்குப் பெரிய அளவிலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
301-400: இது மிகவும் மோசமான காற்றின் தரத்தைக் குறிக்கிறது. இத்தகைய சூழலில் நீண்ட காலம் வாழ்பவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. தற்போது சென்னையில் காற்றின் தரம் இந்த நிலையில்தான் உள்ளது.
401-500: இது காற்றின் தரக்குறியீட்டின் மிகக் கடுமையான வரம்பாகும். இந்த நிலையில் உள்ள காற்று, சாதாரணமானவர்களுக்குகூட உடல்நலப் பாதிப்புகளையும், உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு மிகக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இந்தியாவில், தற்போது மிக மோசமான காற்றின் தரத்துடன் உள்ள முக்கிய நகரங்கள்:
பாட்னா: 405
நொய்டா: 402
டெல்லி: 359
கொல்கத்தா: 355
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications