தீபாவளி.. சுவாசிக்கவே சிரமம்.. சென்னையில் மோசமான நிலையை அடைந்த காற்று மாசு! ஷாக் தந்த நம்பர்
சென்னை: தீபாவளியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு குறியீடு (AQI) 359ஐ எட்டியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஒருசில மாநிலங்களில் பண்பாட்டு வழக்கப்படி இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடும் பழக்கம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நேற்றே தீபாவளி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் விளைவாக, பட்டாசு வெடித்த காரணத்தால் காற்றின் தரம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. இவ்வாண்டும் அதேபோல சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 250க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலை மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. நீண்ட காலம் இந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.
சென்னையில் காற்று மாசு
சென்னையின் வேளச்சேரி பகுதியில் காற்றின் தரக்குறியீடு 301ஐ தொட்டுள்ளது, இது மிக மோசமான உடல்நலக் கேடு விளைவிக்கும் நிலையாகும். இப்பகுதிகளில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெருங்குடியில் 231 ஆகவும், செங்கல்பட்டில் 242 ஆகவும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. ஏற்கெனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.
புதுச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 243 ஆகவும், மதுரையில் 132 ஆகவும் பதிவாகியுள்ளது.
காற்றின் தரக்குறியீடு (AQI) வரம்புகள் இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளன:
0-50: இந்த வரம்பு சிறந்த காற்றின் தரத்தைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் குழந்தைகள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்குகூட எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
51-100: இந்த வரம்பு திருப்திகரமான காற்றின் தரமாகும். ஆனால், சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒருசில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.
101-200: மிதமான காற்றின் தரத்தைக் குறிக்கும் இந்த வரம்பு, காற்று அவ்வளவு நல்ல நிலையில் இல்லை என்பதைக் காட்டுகிறது. குழந்தைகள், வயதானவர்கள், மற்றும் ஏற்கெனவே நுரையீரல் கோளாறுகள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
201-300: இந்த வரம்பு காற்றின் தரம் மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. நீண்ட நாட்களுக்கு இந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்குப் பெரிய அளவிலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
301-400: இது மிகவும் மோசமான காற்றின் தரத்தைக் குறிக்கிறது. இத்தகைய சூழலில் நீண்ட காலம் வாழ்பவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. தற்போது சென்னையில் காற்றின் தரம் இந்த நிலையில்தான் உள்ளது.
401-500: இது காற்றின் தரக்குறியீட்டின் மிகக் கடுமையான வரம்பாகும். இந்த நிலையில் உள்ள காற்று, சாதாரணமானவர்களுக்குகூட உடல்நலப் பாதிப்புகளையும், உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு மிகக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இந்தியாவில், தற்போது மிக மோசமான காற்றின் தரத்துடன் உள்ள முக்கிய நகரங்கள்:
பாட்னா: 405
நொய்டா: 402
டெல்லி: 359
கொல்கத்தா: 355
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications