Diwali train: தீபாவளிக்கு ரயில், பஸ் டிக்கெட் எல்லாம் காலி! தென் மாவட்டங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் ரயில்வே?
சென்னை: தீபாவளி (Diwali train ticket) பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், தெற்கு ரயில்வே அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். தொழில், வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொந்த ஊரை விட்டு சென்னையில் தங்கி வசித்து வருகிறார்கள்.

தீபாவளி டிக்கெட் முன்பதிவு
சொந்த ஊரில் திருவிழா, பண்டிகை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்களில் குடும்பத்தினரோடு சொந்த ஊர் சென்று வருகிறார்கள். இப்படி சொந்த ஊருக்கு செல்லும்போது, சாதாரண நாட்கள் என்றால் பஸ்களிலோ அல்லது ரயில்களிலோ டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் சென்று மீண்டும் சென்னை திரும்புவதற்குள், "போதும், போதும்" என்று ஆகிவிடும்.
அந்த அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கும். ஒரு புறம் கூட்ட நெரிசல் என்றாலும், இன்னொரு புறம் டிக்கெட்டே கிடைக்காத நிலையும் ஏற்படும். ஆம்னி பஸ்களில் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும். ரயிலில் போக வேண்டும் என்றால் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் தான், நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
காத்திருப்போர் பட்டியல்
இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இதில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் பலவற்றிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதிகை, நெல்லை, குமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முதல் ஏசி முதல் வகுப்பு வரை எல்லா படுக்கைகளும் நிரம்பிவிட்டதால் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது என்பதால், எப்படியாவது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட யோசித்து வருகிறார்கள். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரயில்களும் நிரம்பிவிட்டதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என எதிர்பார்த்து உள்ளனர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
இந்த நிலையில் தான், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம் தான். எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு முன்பு தான் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 2வது வாரத்தில் சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகும்.
பெரும்பாலும் இந்த ரயில் பகல் மற்றும் இரவு நேரத்தில் செல்லக்கூடிய ரயிலாக இருக்கும். தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இதேபோன்று, கூடுதல் பெட்டிகளை எந்தெந்த ரயில்களில் இணைக்க சாத்தியம் உள்ளதோ, அதற்கு ஏற்ப பெட்டிகள் அதிகரிக்கப்படும். எந்தெந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்பது ஆய்வு செய்து அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications