மனு தர வரல.. கேப்டனை பாக்கதான் வந்தேன்.. கண்ணீர் விட்ட நிர்வாகி.. எமோஷனல் ஆன விஜயகாந்த்!
தேமுதிக சார்பாக நடைபெற்ற நேர்காணலில் விஜயகாந்த் பங்கேற்றார்.
Recommended Video

சென்னை: ரொம்ப நாளைக்கு பிறகு விஜயகாந்த்தை நிர்வாகிகள் நேரில் பார்த்து ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு போய்விட்டனர். அதை பார்த்து கேப்டனும் எமோஷனல் ஆகிவிட்டார்!
மற்ற கட்சிகளை போலவே தேமுதிகவும் தீவிர தேர்தல் பணியில் இறங்கிவிட்டது. இதற்கான நேர்காணல்கூட நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
வீட்டுக்கு பக்கமாக இருப்பதால் கோயம்பேடு தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த்தால் வர முடிகிறது. அப்படித்தான் நேற்று நேர்காணலுக்கு வந்திருந்தார். அவர் தலைமையில்தான் நேர்காணலும் நடந்தது.

பிரேமலதா
அந்த நேர்காணல் அறையில் நடுவில் கட்சி நிறுவனர் கேப்டன் உட்கார்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் நேர்காணல் குழுவினர் உட்கார்ந்திருந்தனர். அதில் சுதீஷ் பங்கேற்றிருந்தார். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் நெல்லை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தாராம்.

பணம் செலவு
ஒவ்வொருவராக விருப்ப மனுக்களை அளித்தனர். அப்போது நீண்ட நாள் கழித்து கேப்டனை நிர்வாகிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். அவர்களிடம் விஜயகாந்த்தால் எதுவுமே பேச முடியவில்லை போல் தெரிகிறது. எலக்ஷனுக்கு எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள் என்று கைவிரலை சுண்டிதான் கேள்வி கேட்டார்.

ஆதங்கம்
அதற்கு நிர்வாகிகள் பதில் அளித்தாலும் வாய் திறந்துகேப்டன் பேசமுடியவில்லையே ஆதங்கப்பட்டனர். நிர்வாகிகளில் நன்கு பரிச்சயமானவர்களை பார்த்ததும் முகம் பிரகாசமாகி ஏதோ பேச முயன்றார். ஆனால் அது என்னவென்றுதான் அவர்களுக்கு புரியவில்லை.

வேட்புமனு
இதில், மற்றொரு சம்பவம் என்னவென்றால், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி என்பவர் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். நேர்காணல் அறைக்கு சென்ற அவரிடம், தொகுதியின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று குழுவினர் கேள்வி கேட்டனர்.

கண்கலங்கினார்
அதற்கு ஆனந்தமணி, ‘நான் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. கேப்டனை பார்க்கத்தான் வந்தேன்" என்றார். இதைக் கேட்டதும் விஜயகாந்த், கண் கலங்கிவிட்டார். பிறகு நிர்வாகியை பார்த்து பாசமுடன் சிரித்தார்.
|
எங்க ஆசை
எப்படியோ, விஜயகாந்தை ஆசை தீர நேரில் பார்த்த இந்த நேர்காணல் மூலமாக கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் எல்லோரும் நேர்காணலில் கேப்டனிடம் சொல்லிவிட்டு போனது என்ன தெரியுமா? "கேப்டன்.. நீங்க ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடணும், இதுதான் எங்களுக்கு ஆசை" என்பதுதான்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications