மனு தர வரல.. கேப்டனை பாக்கதான் வந்தேன்.. கண்ணீர் விட்ட நிர்வாகி.. எமோஷனல் ஆன விஜயகாந்த்!
தேமுதிக சார்பாக நடைபெற்ற நேர்காணலில் விஜயகாந்த் பங்கேற்றார்.
Recommended Video

சென்னை: ரொம்ப நாளைக்கு பிறகு விஜயகாந்த்தை நிர்வாகிகள் நேரில் பார்த்து ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு போய்விட்டனர். அதை பார்த்து கேப்டனும் எமோஷனல் ஆகிவிட்டார்!
மற்ற கட்சிகளை போலவே தேமுதிகவும் தீவிர தேர்தல் பணியில் இறங்கிவிட்டது. இதற்கான நேர்காணல்கூட நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
வீட்டுக்கு பக்கமாக இருப்பதால் கோயம்பேடு தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த்தால் வர முடிகிறது. அப்படித்தான் நேற்று நேர்காணலுக்கு வந்திருந்தார். அவர் தலைமையில்தான் நேர்காணலும் நடந்தது.

பிரேமலதா
அந்த நேர்காணல் அறையில் நடுவில் கட்சி நிறுவனர் கேப்டன் உட்கார்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் நேர்காணல் குழுவினர் உட்கார்ந்திருந்தனர். அதில் சுதீஷ் பங்கேற்றிருந்தார். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் நெல்லை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தாராம்.

பணம் செலவு
ஒவ்வொருவராக விருப்ப மனுக்களை அளித்தனர். அப்போது நீண்ட நாள் கழித்து கேப்டனை நிர்வாகிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். அவர்களிடம் விஜயகாந்த்தால் எதுவுமே பேச முடியவில்லை போல் தெரிகிறது. எலக்ஷனுக்கு எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள் என்று கைவிரலை சுண்டிதான் கேள்வி கேட்டார்.

ஆதங்கம்
அதற்கு நிர்வாகிகள் பதில் அளித்தாலும் வாய் திறந்துகேப்டன் பேசமுடியவில்லையே ஆதங்கப்பட்டனர். நிர்வாகிகளில் நன்கு பரிச்சயமானவர்களை பார்த்ததும் முகம் பிரகாசமாகி ஏதோ பேச முயன்றார். ஆனால் அது என்னவென்றுதான் அவர்களுக்கு புரியவில்லை.

வேட்புமனு
இதில், மற்றொரு சம்பவம் என்னவென்றால், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி என்பவர் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். நேர்காணல் அறைக்கு சென்ற அவரிடம், தொகுதியின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று குழுவினர் கேள்வி கேட்டனர்.

கண்கலங்கினார்
அதற்கு ஆனந்தமணி, ‘நான் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. கேப்டனை பார்க்கத்தான் வந்தேன்" என்றார். இதைக் கேட்டதும் விஜயகாந்த், கண் கலங்கிவிட்டார். பிறகு நிர்வாகியை பார்த்து பாசமுடன் சிரித்தார்.
|
எங்க ஆசை
எப்படியோ, விஜயகாந்தை ஆசை தீர நேரில் பார்த்த இந்த நேர்காணல் மூலமாக கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் எல்லோரும் நேர்காணலில் கேப்டனிடம் சொல்லிவிட்டு போனது என்ன தெரியுமா? "கேப்டன்.. நீங்க ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடணும், இதுதான் எங்களுக்கு ஆசை" என்பதுதான்!
-
விஜயகாந்தின் வலதுகரத்திற்கே சீட் இல்லையா.. தேமுதிகவில் புதிய பஞ்சாயத்து -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications