நாளை தொண்டர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்! களைகட்டும் தேமுதிக தலைமை அலுவலகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு செல்கிறார்.
பல மாதங்களாக வீட்டில் ஓய்விலிருந்து வரும் விஜயகாந்தை நேரில் காண தேமுதிகவினர் ஆர்வமுடன் உள்ளனர். நாளைக்கு என்ன விஷேசம் என்றால் விஜயகாந்தின் பிறந்தநாள் தான். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்புத்தினமாக கடைபிடித்து வருகிறார் விஜயகாந்த்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்களும், ரசிகர் மன்றம் காலம் முதல் விஜயகாந்துடன் பயணிப்பவர்களும் விஜயகாந்தை சந்திப்பதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இது குறித்து தேமுதிக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை "வறுமை ஒழிப்பு தினமாக" தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பில் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பல்வேறு நலஉதவிகளை வழங்கிட உள்ளனர்.''
''வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், 25.08.2023 வெள்ளி) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழக தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications