வாழ்த்துகிறேன்.. நம்புகிறேன்... பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் எழுதிய லட்டர் இதுதான்!
பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து கடிதம் எழுதி உள்ளார்
சென்னை: இப்போ வேற வழியில்லை.. அதனால் மத்திய அரசிடம் வெறும் கோரிக்கையை வைக்க ஆரம்பித்துவிட்டது தேமுதிக!
யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, பாஜகவுக்கு தேமுதிக மீது ஒரு பிடிப்பு! அதனால்தான் தேடி வந்து கூட்டணிக்கு பேசியது. இப்போது போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோற்று விட்டாலும், ராஜ்ய சபா சீட் தருவார்களா என சுதீஷ் ஒரு பக்கம் முயற்சி செய்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏதாவது ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தால் இந்த நிலைமையே வேறு. அதனால் தமிழகம் தொடர்பான எந்த விஷயத்தையும், திட்டத்தையும் வலுவாக எடுத்து வைக்கும் வாய்ப்பை தேமுதிக தவறிவிட்டுள்ளது. அதனால் கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
அதாவது, புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதர் மோடி அரசுக்கு ஒரு வாழ்த்தை சொல்லி விட்டு, நாட்டு நலன் சம்பந்தமாக சில வேண்டுகோளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வைத்துள்ளார். இதற்காக லட்டர் ஒன்றையும் எழுதி இருக்கிறார்.
அதில், "பிரமாண்ட வெற்றியுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சி அமைக்கும் உங்களை வாழ்த்துகிறேன். விரைவில் இந்தியாவின் நதிகளை இணைத்து, நீராதாரம் பெருகிடவும், விவசாயம் செழிக்கவும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்களின் வறுமையை தங்களது அரசு ஒழிக்கும். தங்களுக்கும் தங்களது அமைச்சரவை சகாக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்று எழுதி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications