அதிமுக வா... பாஜக வா... தேமுதிக யாருடன் கூட்டணி... சுதீஷ் சூசக பேச்சு
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் தமிழக கட்சிகள் மும்முரமாக உள்ளன. தமிழத்தில் ஆளும் கட்சியான அதிமுக மற்றும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்தின் தேமுதிக கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாஜக நிறைய வீடியோக்களை இதுவரை வெளியிட்டு இருக்கிறது. அதேபோல் ராபர்ட் வத்ரா லண்டனில் மோசடி செய்து சொத்துக்களை குவித்து இருக்கிறார் என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் 20 கோடி ரூபாய்க்கு முறைகேடாக நிலம் வாங்கியது, இரண்டு புதிய வீடுகள் வாங்கியது மற்றும் புதிதாக நிறைய சொத்துக்களை வாங்கியது குறித்து அமலாக்கத்துறை வத்ரா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வத்ரா இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்.
நட்பு அடிப்படையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறும். மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம்.
அதுவே தான் எங்களுடைய கோரிக்கையாக இப்போதும் இருக்கிறது. விஜயகாந்த் வந்த பின்னர் தான் கூட்டணி குறித்து உறுதி
செய்யப்படும். தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பிரசாரம் மற்றும் இதர தகவல்கள் தெரிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications