கருணாஸ் கட்சியும், நாங்களும் ஒன்னா.. கொதிக்கும் வேல்முருகன்.. திமுக கூட்டணியில் தொடர்வாரா?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி இம்முறை அதிக இடங்களில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கிடாவிட்டால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கருணாஸ் கட்சிக்கும் ஒரு தொகுதி, தங்களுக்கும் ஒரு தொகுதியா என்று தவாகவினர் முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு கட்சிகளுடனும் திமுக சீனியர்கள் பிரத்யேகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இறுதியாகிவிட்ட நிலையில், இன்னும் தொகுதிகள் பங்கீடு குறித்து மட்டும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தமீமுன் அன்சாரி, தனியரசு, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். அதேபோல் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தில் இருக்கிறது. இதனால் திமுக தலைமை எப்படி தொகுதிகளை ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரி வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் 38ல் இருந்து 41 தொகுதிகள் வரை கேட்டு வருகிறது. ஆனால் திமுக தரப்பிலோ 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று பிடிவாதமாக உள்ளது. மறுபக்கம் விசிக, சிபிஐ மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிடும் முடிவில் இருப்பதால், தொகுதிகளை குறைக்க பேசி வருகிறது. அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியிடம் கடந்த முறை கொடுக்கப்பட்ட அதே தொகுதி எண்ணிக்கையை வாங்கி கொள்ளுங்கள் என்று பேசி வருகிறது. இதனால் தவெக தலைவர் வேல்முருகன் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட தரப்பும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதனால் தவாகா வேல்முருகன் தரப்பு ஆதரவாளர்கள் கட்சி ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் வளர்ந்திருக்கிறோம்.. கருணாஸ் கட்சியும் நாங்களும் ஒன்றா என்று கேள்வி எழுப்பி தொடங்கி இருக்கின்றனர்.
இதனால் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த முறையை காட்டிலும் இம்முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றால், கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவில் வேல்முருகன் தரப்பு இருப்பதாக விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.
-
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications