கருணாஸ் கட்சியும், நாங்களும் ஒன்னா.. கொதிக்கும் வேல்முருகன்.. திமுக கூட்டணியில் தொடர்வாரா?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி இம்முறை அதிக இடங்களில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கிடாவிட்டால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கருணாஸ் கட்சிக்கும் ஒரு தொகுதி, தங்களுக்கும் ஒரு தொகுதியா என்று தவாகவினர் முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு கட்சிகளுடனும் திமுக சீனியர்கள் பிரத்யேகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இறுதியாகிவிட்ட நிலையில், இன்னும் தொகுதிகள் பங்கீடு குறித்து மட்டும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தமீமுன் அன்சாரி, தனியரசு, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். அதேபோல் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தில் இருக்கிறது. இதனால் திமுக தலைமை எப்படி தொகுதிகளை ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரி வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் 38ல் இருந்து 41 தொகுதிகள் வரை கேட்டு வருகிறது. ஆனால் திமுக தரப்பிலோ 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று பிடிவாதமாக உள்ளது. மறுபக்கம் விசிக, சிபிஐ மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிடும் முடிவில் இருப்பதால், தொகுதிகளை குறைக்க பேசி வருகிறது. அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியிடம் கடந்த முறை கொடுக்கப்பட்ட அதே தொகுதி எண்ணிக்கையை வாங்கி கொள்ளுங்கள் என்று பேசி வருகிறது. இதனால் தவெக தலைவர் வேல்முருகன் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட தரப்பும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதனால் தவாகா வேல்முருகன் தரப்பு ஆதரவாளர்கள் கட்சி ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் வளர்ந்திருக்கிறோம்.. கருணாஸ் கட்சியும் நாங்களும் ஒன்றா என்று கேள்வி எழுப்பி தொடங்கி இருக்கின்றனர்.
இதனால் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த முறையை காட்டிலும் இம்முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றால், கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவில் வேல்முருகன் தரப்பு இருப்பதாக விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏன்? வளர்ச்சியா? வீழ்ச்சியா? தவாக வேல்முருகன் அழுத்தமான பதிவு -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்!












Click it and Unblock the Notifications