Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் கூட்டணியில் இழுபறி.. இறங்கி வராத 2 கம்யூனிஸ்ட் கட்சிகள்.. கறார் காட்டும் திமுக.. புது பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் சுமூகமாக தொகுதி பங்கீடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுக கறார் காட்டுவதால் தற்போது 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் அதிருப்தியடைந்துள்ளதோடு, தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். அதற்கு முன்பாகவே திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

dmk-alliance-cm-stalin-seat-talks-committee-clearly-says-willing-to-offer-only-5-seats-each-for-cpm

வழக்கத்தை விட இந்த முறை திமுக கூட்டணியில் பல்வேறு புதிய கட்சிகள் இணைந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக, எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகள் சேர்ந்துள்ளன. இதுதவிர ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமாகி உள்ளது.

கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட்கள்

இதனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் திமுகவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 2021 சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை இருகட்சிகளும் இரட்டை இலக்கத்தில் எதிர்பார்த்தன. ஆனால் அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை.

5 தொகுதிகள் மட்டுமே

இதனால் இருகட்டங்களாக 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. திமுக தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்தவர்கள் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும். கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முடியாது என்று உறுதியாக கூறிவிட்டனர். கூட்டணிக்குள் பல புதிய கட்சிகள் வந்துள்ளதால் அவர்களுக்கு தொகுதிகள் வழங்கும் வகையில் இந்த எண்ணிக்கை குறைக்கப்படுகிறது என்று திமுக தரப்பில் உறுதியாக கூறிவிட்டது.

அதிருப்தி

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நேற்று மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசினர். அப்போது சண்முகம் 6 தொகுதிகளுக்கு மேலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் திமுக மறுத்துள்ளது.

இதனால் இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தியடைந்துள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டாதால் இந்த முறையும் 6 சீட்டுகளை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை வைத்துள்ளது.. ஆனால் அதனை திமுக தரப்பு கேட்பதாக இல்லை. 5 தொகுதிகள் தான் என்று உறுதியாக திமுக கூறிவிட்டதாம்.

ஆலோசனை

இதுபற்றி சண்முகம், ''இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்டோம். ஆனால் புதிய கட்சிகள் வந்துள்ளதால் நாங்கள் தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்துள்ளோம். ஆனாலும் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம். இதுபற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து சொல்வதாக தெரிவித்தனர். அவர்கள் தங்களின் வரம்புகள் பற்றி தெரிவித்தனர். இருப்பினும் தொகுதி பங்கீடு சுமூகமாக நடக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.

அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் எதிர்பார்த்தது. ஆனால் திமுக 5 தொகுதிகள் என்று தான் கூறியுள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கமிட்டி குழு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக உடனான தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவது திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+