உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக...4 இடங்களில் முன்னிலை
சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்த தேர்தலில் வைகோ தலைமையிலான மதிமுக 6 இடங்களில் போட்டியிட்டது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, தாங்கள் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் திமுக.,வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது.

சாத்தூர், கோவை வடக்கு, மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 பொது தொகுதிகளிலும், வாசுதேவநல்லூர், மதுராந்தகம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளிலும் மதிமுக போட்டியிட்டது. இவற்றில் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
அரியலூர் தொகுதியில் சின்னப்பாவும், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், சாத்தூர் தொகுதியில் ரகுராமன், வாசுதேவநல்லூரில் சதன் திருலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications