சமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே உள்ளன. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் திமுகவும், அதிமுகவும் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.

பேச்சுவார்த்தை
திமுகவில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த, திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உடன்
திமுக குழுவினர் காங்கிரஸ் உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ள திமுக, இரண்டாம் கட்டமாக பேசி எத்தனை தொகுதி என்பதையும், தொகுதிகளையும், இறுதி செய்யும் என கூறப்படுகிறது. எத்தனை தொகுதி என்பது தெரியவரவில்லை. 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்

அண்ணா அறிவாலயம்
இந்நிலையில் திமுக, தனது கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வருகை தந்தனர்.

முஸ்லிம் லீக்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் காதர் மொய்தீன், அபுபக்கர் ஆகியோருடன் பேசினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், "
தொகுதிகள் பற்றி நாங்கள் தெரிவிக்கவில்லை என்று எண்ணிக்கை பற்றி தான் நாங்கள் பேசினோம். இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், நாளை முடிவு எட்டிவிடும்" என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி
இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுடனும் திமுக குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "திமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததுள்ளது. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நான்கு தொகுதிகள் கேட்டுள்ளோம். நாளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எத்தனை இடங்கள் என்பது வெளியிடப்படும்" என்றார்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications