சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் பாண்டவர் அணியை ஒன்றும் செய்ய முடியாது: ஜெயக்குமார் அசால்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் ஒன்றும் செய்யமுடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

DMK and AMMK cant do anything ADMK: Minister Jayakumar

தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் முழுமையான அளவில் உள்ளது என்றும் சமூகத்திற்கு நண்பனாக இருப்பதே பத்திரிக்கையின் சிறந்த கடமையாக இருக்க முடியும் என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, கட்சி ஆட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை எடுப்பது என்பது தவிர்க்க முடியாதது. அதிமுக பாண்டவர் அணி. பாண்டவர் அணியான எங்களுக்கு சூழ்ச்சி தெரியாது.

துரோகமும் துரோகமும் ஒன்று சேர்ந்துள்ளது. யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது. சகுனியான திமுக சூழ்ச்சி செய்யும்.

திமுகவும், அமமுகவும் குழப்பத்தில் உள்ளது. எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. சகுனியும் துரியோதனன் கும்பலும் தான் தற்போது ஒன்று சேர்ந்துள்ளது. மே 23ஆம் தேதிக்கு பிறகு திமுகவும் அமமுகவும் நினைப்பது நிறைவேறாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+