கேசிஆருக்கு கட்டம் கட்டிய ஸ்டாலின்.. தெலங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு என திமுக அறிவிப்பு!
சென்னை: தெலங்கானா சட்டசபை தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு திமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் உள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் இந்த மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்டது.

இதைடுத்து 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த 2 சட்டசபை தேர்தல்களிலும் சந்திரசேகர ராவ் தான் வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார். அப்போது அவரது கட்சி தெலங்கனா ராஷ்ட்ரிய சமீதி என்ற பெயரில் போட்டியிட்டு வென்றது. தற்போது அவரது கட்சி பிஆர்எஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தெலங்கானா சட்டசபையின் 5 ஆண்டு காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் மெஜாரிட்டியுடன் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் 3வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும் தெலங்கானா சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் நேரடி போட்டி என்பது பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே தான் நடக்கிறது. அதோடு பல கருத்து கணிப்புகள் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளில் ஒன்று தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. மாறாக பாஜக மற்றும் ஓவைசியின் கட்சிகள் ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.
இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதேபோல் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், திமுக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் நீட்சியாக தான் தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு திமுக ஆதரவு வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நவம்பர் 30ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தெலங்கானா மாநில கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டு கொள்ளப்படுகிறார்கள்'' என கூறப்பட்டுள்ளது.
*******
-
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications