"அமைச்சர் பொன்முடி வீட்டில் என்ன நடக்கிறது.." ரெய்டில் சிக்கிய திமுக தொண்டர்.. வெளியே வந்து பரபர
சென்னை: திமுக அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், ரெய்டின் போது மனு கொடுக்க சென்ற திமுக தொண்டர் ஒருவரும் உள்ளே சிக்கியுள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் அமைச்சர் பொன்முடி.. திமுக அரசில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது.
காலை 7 மணியளவில் விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. பொன்முடி வீட்டில் மட்டுமின்றி அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.

அதிரடி ரெய்டு: மத்திய படைகளின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் இந்த ரெய்ட்டை நடத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு ஆரம்பித்த இந்த ரெய்டு பல மணி நேரமாகத் தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்த ரெய்டிற்கு என்ன காரணம் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மத்திய பாஜகவின் முயற்சி இது. இந்த ரெய்டிற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அமலாக்கத் துறையினர் இந்த ரெய்டின் போது அமைச்சர் பொன்முடிக்கு மனு கொடுக்க சென்ற திமுக தொண்டரும் இந்த சோதனையில் சிக்கியுள்ளார். அவரது மொபைலையும் அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவரை வீட்டிற்குள் வைத்திருந்த அதிகாரிகள் அந்த திமுக தொண்டரிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே அவர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியே அனுப்பப்பட்டார்.
சிக்கிய திமுக தொண்டர்: வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த திமுக தொண்டர், "நான் அமைச்சரிடம் எங்கள் தொகுதியில் இருக்கும் கலைக்கல்லூரி விவகாரம் குறித்து மனு கொடுக்கவே சென்றிருந்தேன். காலை 8 மணியளவில் நான் மனு கொடுக்க வந்தேன். அப்போது கேட்டின் அருகே சென்று எட்டிப் பார்த்தேன். உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் என்னை உள்ளே இழுத்தனர். என்னிடம் இருந்த மொபைலையும் பிடுங்கிக் கொண்டனர்.

நான் இதய நோயாளி வெளியே செல்ல வேண்டும் என்றேன்.. என்னை உள்ளே விடவில்லை. வெளியே இருப்பவர்கள் டீ வாங்கிக் கொடுத்த போதிலும்.. அதையும் உள்ளே விடவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவர்களாகவே வந்து மொபைலை எடுத்துக் கிளம்பலாம் என்றார்கள். இருப்பினும், அப்போது நான் கிளம்ப மாட்டேன் என்றேன்.. இருப்பினும், வலுக்கட்டாயமாக என்னிடம் மொபைலை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டனர்.
உள்ளே என்ன நடக்கிறது: உள்ளே 5, 6 அதிகாரிகள் இருக்கிறார்கள். அமைச்சரும் உள்ளே தான் இருக்கிறார்.. எதற்காக இங்கே வந்தீர்கள்.. என்ன எடுத்துவிட்டு வந்தீர்கள் எனக் கேட்டார்கள். அவர்களிடம் உரியப் பதிலை அளித்துவிட்டேன்" என்று அவர் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு தொடரும் நிலையில், உள்ளே சிக்கிய திமுக தொண்டர் இப்போது வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இப்போது அவர் நீதிமன்ற காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications