காவிரிய வச்சிக்கோ.. அம்மாவை குடு.. அதிமுகவின் ரணகள போஸ்டரை எடப்பாடிக்கு நினைவுபடுத்தும் திமுகவினர்!
சென்னை: காவிரி நீரைப் பெற அதிமுக தான் உண்மையாகவே பாடுபட்டது என எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், ஒரு பழைய போஸ்டரை எடப்பாடி பழனிசாமிக்கு நினைவூட்டியுள்ளனர் திமுகவினர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அதிமுக,பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேசமயம், காவிரி விவகாரத்தில் திமுக அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக் காலத்தில் அன்றைய அதிமுக எம்பிக்கள் 22 நாட்கள், அவையை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர். இப்போது ஆட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். காவிரி விவகாரத்தில் என்ன அழுத்தம் கொடுத்தார்கள்? தமிழகத்துக்கான உரிமையைப் பெற இவர்கள் என்ன செய்தார்கள்? என்று காட்டமாக விமர்சித்தார்.
மேலும், "அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்தது. இதுக்கு எல்லாம் ஒரு தில்லு, திராணி வேண்டும். அது இந்த அரசிடம் இல்லை. ஏதோ மேலோட்டமாக பேசிக் கொண்டுள்ளனர்." என விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், திமுகவினர் சமூக வலைதளங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது, இங்கு அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை நினைவுகூர்ந்து அதிமுகவை விமர்சித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக தனி நீதிமன்றம்அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார் மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ். "காவிரிய வச்சுக்கோ, அம்மாவைக் குடு" என்று தமிழகமே தேம்புவதாக போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கிரம்மர் சுரேஷ்.
காவிரி பிரச்சினையை சிறுமைப்படுத்தி அதிமுகவினர் ஒட்டிய இந்த போஸ்டர் டெல்டா விவசாயிகளைக் கொதிக்கச் செய்தது. காவிரிப் பிரச்சினையில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வர தமிழ்நாடு பட்ட பாடு என்ன? செத்துப் போன விவசாயிகள் எத்தனை பேர், எத்தனை போராட்டங்கள், எத்தனை வழக்குகள், வேதனைகள்? இவற்றையெல்லாம் சிறுமைப்படுத்தும் வகையில், அவர்களின் தலைவிக்காக நம் உரிமையை விட்டுக்கொடுப்பதாக போஸ்டர் அடிப்பதா? என பலரும் வெகுண்டெழுந்தனர்.

இந்த போஸ்டரை இப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, "காவிரிய வச்சுக்கோ... அம்மாவை கொடு" என கேவலமாக அரசியல் செய்த அதிமுகவினர் தான் இன்று, உண்மையாகவே காவிரி நீரை சட்டப்பூர்வமான வழிகளில் பெற்றுத் தரப் போராடும் திமுகவை, திமுக நாடகம் போடுகிறது என விமர்சிக்கிறார்கள்" என திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அதிமுக - திமுகவினர் கருத்து மோதல் நடத்தி வருகின்றனர்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா











Click it and Unblock the Notifications