தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக?
திண்டுக்கல்: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் திண்டுக்கல்லில் களமிறங்குகிறார் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான ஐபிஎஸ் செந்தில்குமார். பத்தாண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல்லில் அதிமுகவை திமுக நேரடியாக சந்திப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இரண்டு முறை வென்ற திண்டுக்கல் சீனிவாசனுக்கு டஃப் கொடுப்பாரா செந்தில் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார் திமுக அமைச்சர் ஐ பெரியசாமியின் மகனான ஐ.பி. செந்தில்குமார். இரு முறை பழனியில் வென்ற இவர் தற்போது திண்டுக்கல்லில் தனது 4வது தேர்தலில் முதல்முறையாக களமிறங்குகிறார்.

அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் 1972 முதல் அதிமுக உறுப்பினா், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவு செயலா், திண்டுக்கல் மாவட்டச் செயலா், மாநிலப் பொருளாளா், மாவட்ட அவைத் தலைவா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது, வழிகாட்டுதல் குழு உறுப்பினா், அமைப்புச் செயலா், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலா் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறாா்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளாா். 2016ல் தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அமைச்சராகவும் பணியாற்றினாா்.
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 1962 முதல் நடைபெற்ற தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதியை பொருத்தவரை திமுக ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற தேர்தல்களில் சிபிஎம் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆறு முறை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருக்கும் ஐ பெரியசாமி மகன் ஐபி செந்தில்குமார் இந்த முறை திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடப் போவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஐபி செந்தில்குமார் திண்டுக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும், பழனி தொகுதியில் 3 முறை போட்டியிட்டு கடைசி 2 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பவன் பாதி.. ஜெகன் மீதி! அரசியலிலும் ரீமேக்கா? வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு? -
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி -
வில்லிவாக்கத்தில் இழுபறி.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜாக்பாட்? முக்கிய பிரச்சனையே இதுதான்! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
திருவிக நகரில் திடுக்கிடும் மாற்றம்! பொற்கொடி வாக்கு சேகரித்த போது தவெக பெண் செய்த செயலால் பரபரப்பு -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
Villivakkam: ஜவ்வாக இழுக்கும் தொகுதி பிரச்சனை! ஆளும் கட்சிக்கு நெருக்கடியா! ஆதவுக்கு பாசிட்டிவ்?












Click it and Unblock the Notifications