எக்ஸிட் போல் கொடுத்த உற்சாகம்.. இன்று மாலை தி.மு.க வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் தி.மு.க வெற்றி பெறும் என்று கூறியுள்ள நிலையில் இன்று மாலை திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தமிழகத்தை அடுத்த 5 வருடங்களுக்கு ஆட்சி செய்யப்போவது யார்? என்பது அன்று தெரிந்து விடும்.

இதற்கிடையே தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வெளியிட்ட பெரும்பாலான கருத்து கணிப்பில் திமுக அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும்(எக்ஸிட் போல்) திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை திமுக வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications