போட்டியின்றி ராஜ்ய சபாவுக்கு தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்.. சுயேச்சை மனுக்கள் நிராகரிப்பு
சென்னை: மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 எம்பி இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
மக்களவை தேர்தலைப் போல மாநிலங்களை உறுப்பினர்களைப் பொதுமக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக மாநிலச் சட்டசபை மூலமே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் மாநிலங்களவைக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டசபைத் தேர்தலுக்கு முன் திமுகவுக்கு 7 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு 8 உறுப்பினர்களும் இருந்தனர்.

எம் எம் அப்துல்லா
இந்தச் சூழலில் கடந்த மார்ச் மாதம் அதிமுக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த முகமது ஜான் உயிரிழந்தார். இதையடுத்து இதற்கான இடைத்தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்குப் பெரும்பான்மை இருந்ததால், திமுக சார்பில் எம் எம் அப்துல்லா மாநிலங்களவைக்கு எம்பி-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மாநிலங்களவை எம்பி எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது.

அதிமுக எம்பிகள் ராஜினாமா
அதேபோல அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் சட்டசபைத் தேர்தலிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். வேப்பனஹல்லி தொகுதியில் கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்தியலிங்கமும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இருவருமே தங்கள் எம்பி பதவிகளைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்தனர்.

வேட்புமனுத் தாக்கல்
இந்த இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் நேற்றே கடைசி நாளாகும். இதில் திமுக சார்பில் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 21ஆம் தேதி வேட்பு மனு செய்தனர். இவர்களைத் தாண்டி 3 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

போட்டியின்றி தேர்வு
இந்த மனுக்களைத் தேர்தல் நடத்தும் அதிகாரியான சீனிவாசன் பரிசீலனை செய்தார். அதில் சுயேச்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்ட. சட்டசபை உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் அவர்கள் மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் திமுக வேட்பாளர்கள் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வாவது உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10ஆக உயர்ந்துள்ளது.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications