“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி
சென்னை: "எங்களுடன் கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. திமுக தனித்து விடப்பட்டாலும் கவலையில்லை. எங்களுக்கு சொந்த பலம் இருக்கிறது" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தமிழக மக்களின் நலன்; உழைப்பாளி மக்களின் நலன்; எளிய மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் என்று எங்களுடன் இணைகின்ற அனைத்து ஜனநாயக சக்திகளுடன் நாங்கள் இணைவோம் என சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் நீடிக்க முடியாது என மட்டுமே சொல்லி இருக்கிறது. எப்போதும் நீடிக்க முடியாது என சொல்லவில்லை. 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து எங்களோடு பணியாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி.
திமுக தோன்றிய நாள் முதல், பல கட்சிகள் கூட்டணியில் இருந்தன. பின்னர், கூட்டணியை முறித்தும் சென்றிருக்கிறார்கள். எங்களுடன் கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. திமுகவுக்கு சொந்த பலம் இருக்கிறது.
உடன் இருந்தால் அவர்களுடன், இல்லாவிட்டால் அவர்கள் இல்லாமல், எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து களத்தில் நிற்போம். திடீரென ஒருநாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட மனச் சங்கடம் குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். திமுக தனித்து விடப்பட்டாலும் கவலையில்லை.
வெளுத்தது எல்லாம் பால் என நம்பினோம். நாங்கள் 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது, கூட்டணி கட்சியினருக்கு தான் 'தகைசால் தமிழர்' பட்டம் வழங்கினோம். எங்கள் கட்சியினருக்கு கூட இதை தரவில்லை. நாங்கள் கூட்டணியை எந்த அளவுக்கு மதித்தோம் என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.
மேலும், "கூட்டணி கட்சிகள் கொள்கையோடுதான் வந்தனர். இப்போது கொள்கைதான் கேள்விக்குறியாக உள்ளது. என்ன மாற்றம் நடந்துவிட்டது, ஒரு மாதத்தில் அவர்கள் என்ன ஆட்சி செய்துவிட்டனர் என கூட்டணி கட்சிகள் மாறுகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த ஒரு மாதத்தில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என அவர்கள் எங்களை விட்டு செல்கிறார்கள் என்றும் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!











Click it and Unblock the Notifications