“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!
தூத்துக்குடி: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம் என முதலமைச்சர் விஜய் அண்மையில் பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு பேசியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தனது பொறுப்பில் இருந்து முதலமைச்சர் நழுவப் பார்க்கிறார் என விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தனி மனித ஒழுக்கம்தான் சமூக ஒழுக்கம் என எல்லாருக்கும் தெரியும். அதை சொல்லிவிட்டு, பொறுப்பில் இருந்து கைநழுவ பார்க்கிறாரா முதலமைச்சர் விஜய்? உங்கள் கட்சிகாரர்களுக்கே கிடைக்காத நீதி. ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கு எப்படி நீதி வழங்கப் போகிறீர்கள்?

சென்னையில் நடந்த சிறுமி வன்கொடுமை, ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் தவெக கட்சியினர் ஈடுபட்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி. உங்களுடைய கட்சியினரை அழைத்து நடவடிக்கை எடுங்கள்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது எல்லாவற்றிற்கும் 'சிஎம் சார்' தான் பொறுப்பு என்று கூறினீர்களே. இப்போது விஜய் முதலமைச்சரான உடன், 'தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்' என்று சொல்கிறீர்கள். அப்போது இருந்த சிஎம் சார்க்கு மட்டும் சமூக ஒழுக்கம் என்று சொல்லத் தெரியாதா? அப்படி என்றால் நீங்கள் வசனம் பேசவில்லையா, புரிந்து பேசுகிறீர்களா?
சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கவிழா என்பது ஒரு ஆடியோ லான்ச் போல இருந்தது. எப்படி எல்லா பிரச்சார பயணமும் ஒரு சினிமா ஒத்திகை பார்த்தது போல் இருந்ததோ, அதேபோல் 'இது ஆடியோ லான்ச் போன்று ஒரு நிகழ்ச்சியாக நடந்தது. அதற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.
ஒரு குழந்தை பெறுவதற்கே 10 மாதம் ஆகும். ஆட்சி மாறியவுடன் எல்லாம் 'நாங்கள் தான், நாங்கள் தான்' என்று சமூக ஊடகங்களில் பொய் செய்தியை ப்ரோமோட் செய்கிறார்கள். இனி மக்கள் எல்லோரும் வரும் செய்திகள் உண்மையா என்பதை ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
உதாரணமாக, தூத்துக்குடியில் நான் அமைச்சராக இருந்தபோது 850 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டன. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மறுநாளே 'எங்கள் முதலமைச்சர் சிசிடிவி கேமராக்கள் வைத்து விட்டார்' என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது.
அதேபோல், நமது பகுதியில் மாணவர்களுக்காக ஏசி பஸ் ஸ்டாப் எனது சட்டமன்ற நிதியில் வைத்தோம். ஆனால் அதை தற்போது 'மாணவர்களுக்காக ஒரு ஏசி பஸ் ஸ்டாப் வைத்து விட்டோம்' என்று சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பிங்க் பேட்ரோல் என்ற திட்டத்தை பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்று தொடங்கியுள்ளார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications