செல்ல பிராணி மீது இரக்கம்...வீடியோ வெளியிட்ட நபர்...ஓடி வந்து பாராட்டிய ஸ்டாலின்
சென்னை : நடக்க முடியாத தனது செல்ல பிராணிக்கு நடைவண்டி வடிவமைத்து, அந்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட நபருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடக்க முடியாத தனது வளர்ப்பு நாயான வீராவிற்கு நடைவண்டி ஒன்றை வடிவமைத்துள்ளார் காசி என்பவர். அந்த நடைவண்டியை பயன்படுத்தி எப்படி நடப்பது என்பது பற்றி அந்த நாய்க்கு பயிற்சியும் கொடுத்துள்ளார். பூங்கா ஒன்றில் நாய்க்கு பயிற்சி கொடுத்து, நடைவண்டியுடன் நாய் நடக்கும் வீடியோவை அவர், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ரீட்விட் செய்த ஸ்டாலின், அத்துடன் காசியை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், நடக்க இயலாத தனது வளர்ப்புப் பிராணி வீராவுக்காக நடைவண்டியை வடிவமைத்திருக்கும் திரு.காசியின் செயல் நெகிழச் செய்கிறது. யானை மீது எரியும் டயரை வீசுபவர்களுக்கு மத்தியில் தான் காசி போன்ற அன்புநிறை மனிதர்களும் வாழ்கிறார்கள். நன்றி காசி! வீராவின் நடை மகிழ்ச்சி பூக்கச் செய்கிறது! என குறிப்பிட்டுள்ளார்.
நடக்க இயலாத தனது வளர்ப்புப் பிராணி வீராவுக்காக நடைவண்டியை வடிவமைத்திருக்கும் திரு.காசியின் செயல் நெகிழச் செய்கிறது.
— M.K.Stalin (@mkstalin) February 1, 2021
யானை மீது எரியும் டயரை வீசுபவர்களுக்கு மத்தியில் தான் @akaasi போன்ற அன்புநிறை மனிதர்களும் வாழ்கிறார்கள். நன்றி காசி!
வீராவின் நடை மகிழ்ச்சி பூக்கச் செய்கிறது! https://t.co/UouRbErnZq
ஸ்டாலினின் பாராட்டை கண்ட அந்த நபரும். ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பி உள்ளனர். ஸ்டாலினையும், காசியையும் பாராட்டி பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 35000 க்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.