இரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்!
திருவாரூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
Recommended Video

திருவாரூர்: திருவாரூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது.
இதற்கான வேட்பாளர்களை திமுக கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று முறைப்படி தொடங்கினார்.

நேற்று இரவே சென்றார்
இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவே திருவாரூர் சென்றார். நேற்று இரவு திருவாரூரில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 8 மணி அளவில் அவர் திருவாரூர் சென்றார்.

மரியாதை செலுத்தினார்
அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்தார்.

இன்று காலை பிரச்சாரம்
அதன்பின் இன்று காலை 7 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கினார். திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். தெரு தெருவாக நடந்தபடியே திருவாரூரில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறது.

மாலை வரை
இந்த பிரச்சாரம் இன்று மாலை வரை நடக்கும். அதன்பின் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா, ஆடலரசன்முன்னாள் அமைச்சர்கள் நேரு, மதிவாணன் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கூட்டணி கட்சி வேட்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications