கொளத்தூர் தொகுதியில்... திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
சென்னை: சென்னை: கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது.

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை முதல் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். முதல் நாளில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் சென்னை கொளத்தூர் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3ஆவது முறையாகக் களமிறங்குகிறார்.
முன்னதாக திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications