Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக - காங்கிரஸ் கூட்டணி இன்று உறுதியாகிறது.. மகிழ்ச்சியான செய்தி காலை வந்தது.. கோபண்ணா பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி இன்று உறுதியாகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் - தவெக இடையிலான கூட்டணி உருவாக்கப்பட கடந்த 6 மாதங்களாக முயற்சிகள் நடந்ததாக கூறிய கோபண்ணா, அந்த முயற்சி வெற்றிகரமாக இன்று முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலில் ஆட்சியில் பங்கு என்று பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தற்போது, கூடுதல் தொகுதிகள் என்று பேச தொடங்கியுள்ளனர். திமுக - காங்கிரஸ் இடையில் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

DMK - Congress Alliance

அப்போது திமுக 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்று கூறி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 41 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டி இருக்கிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இதுதான் எங்களால் முடியும்.. இல்லையென்றால் உங்கள் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமுக தெளிவாக கூறிவிட்டது. இன்னொரு பக்கம் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேசி வந்தது.

இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோ சந்திக்க உள்ளனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரிகிறதா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா பேசுகையில், நேற்று காலை டெல்லிக்கு வந்தேன். பல தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருக்கிறேன்.

12.30 மணிக்கு ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை இருவரும் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். இதன் மூலமாக கூட்டணி இறுதி வடிவம் பெறும். கூட்டணியும் உறுதி செய்யப்படும். மல்லிகார்ஜுன கார்கேவையும் நேற்று சந்தித்தேன். மல்லிகார்ஜுன கார்கே பின் பெங்களூர் சென்று ப.சிதம்பரம் உடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்புக்கு பலன் கிடைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக என்னை போன்ற காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தோம். தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் அப்படிதான் இருந்தோம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சத்தில் இருந்தோம். மிகப்பெரிய மோசமான சூழலில், ப.சிதம்பரம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.

சோனியா காந்தியின் ஆதரவோடு, மல்லிகார்ஜுன கார்கே ஆதரவோடு, ராகுல் காந்தியின் ஆதரவோடு இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெற்றிக் கூட்டணியாக இருக்க போகிறது. இதில் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் முதல்வர் ஸ்டாலின். ஏனென்றால் அவரின் சகிப்புத்தன்மை. அதற்காக வாழ்த்துகிறேன். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெக.

நடிகை விஜய் ஒரு தலைவர்.. அதன்பின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா.. அப்படியொரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதா? அது தற்கொலைக்கு சமம் என்ற வேதனை இருந்தது. கடந்த 6 மாதங்களாக சதித்திட்டம் தீட்டி கூட்டணிக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமை. இதுவரை பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லாத தவெகவுடன் எப்படி சேர முடியும்.. பாஜக எதிர்க்க துணிவில்லாத கட்சி தவெக. அவர்களுடன் கூட்டணி அமைக்க முயற்சி நடந்ததை அவமானகரமாக கருதினேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+