காங்கிரஸ் கேட்டது 39+2! திமுக கொடுத்தது 25+1? கே.சி.வேணுகோபாலிடம் கறார் காட்டினாரா ஸ்டாலின்?
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக சொல்லப்படும் நிலையில் 25 சட்டசபை தொகுதிகளும், ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அரசியல் பார்வையாளர்கள் தங்களுக்கு கிடைத்த தகவலை தெரிவித்து வருகிறார்கள்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவும் காங்கிரஸும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களாக இரு கட்சிகளிடையே ஏற்பட்ட சிறு இழுபறி நிலைக்கு பிறகு, நேற்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசியபோது, முதல்வர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பு சுமூகமாக நடந்ததாகவும், ஆனால் இறுதி முடிவுகளுக்கு இன்னும் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பிப்ரவரி 22-ஆம் தேதி மாலை ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், கே.சி. வேணுகோபால், கனிமொழி, சிங் தியோ ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தாலும், தொகுதி எண்ணிக்கை குறித்து இன்னும் உறுதியான ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை காங்கிரஸ் மேலும் கூடுதல் தொகுதிகளை அதாவது 39 தொகுதிகளை எதிர்பார்க்கிறது என்கிறார்கள். அத்துடன் இரு ராஜ்யசபா சீட்டையும் கேட்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் முதல்வர் ஸ்டாலினோ 25 சட்டசபை தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கொடுப்பதாக கறாராக தெரிவித்துவிட்டாராம். மேலும், திமுக சுமார் 167-170 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதால், மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை) இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை உள்ளதால் காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்துவிட்டாராம்.
சமீபத்தில் தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்ததால், தொகுதி பங்கீடு இன்னும் சிக்கலாகியுள்ளது. தங்களுக்கு நல்லதொரு எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி என பிரேமலதா தெரிவித்திருந்தார். அப்படியிருக்கும் போது ஓரளவுக்கு எத்தனை சீட் என்பதை திமுக தலைமையிடம் பேசியிருப்பார். எனினும் ஸ்டாலின் கறார் காட்ட முக்கிய காரணமாக காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு கோரிய சில கருத்துகள் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோரால் திமுகவை எரிச்சலடையச் செய்தன என்கிறார்கள்.
இருப்பினும், இரு கட்சிகளின் தலைமையும் கூட்டணியை தக்க வைக்க விரும்புவதால், பேச்சுவார்த்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஏற்கெனவே தொகுதி பங்கீட்டு குழுவை அமைத்து IUML உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
காங்கிரஸுடனான இறுதி ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் எட்டப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அப்போது இந்த 25 தொகுதிகளை விட ஓரிரு தொகுதிகள் கூட வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஸ்டாலினோ 25-க்கு மேல் கேட்காதீர்கள் என கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த முறை ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டாம் என காங்கிரஸ் தலைமை, கே.சி.வேணுகோபாலிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஒரு வேளை திமுக 25 -க்கு மேல் தொகுதிகளை கூட்டாவிட்டால் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ளுமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி அமைக்க சோனியா காந்தியும் ராகுலும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
லால்குடி தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. வியந்த திருச்சி












Click it and Unblock the Notifications