வழக்குகளை காரணம் காட்டாதீர்.. 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துக.. திமுக தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலுவை வழக்குகளை காரணம் காட்டாமல் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய இடைத்தேர்தல்களையும் மற்ற 18 தொகுதி இடைதேர்தல்களுடன் நடத்த வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழகத்துக்கு லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டது.

DMK convenes important meeting today

கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை இன்று அறிவிக்கப்படவுள்ளது. அது போல் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணலும் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தப்படாது என்று அறிவித்தார்.

இந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+