அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வி.ஏ.ஓ. தேர்வு முதல் இளநிலை பொறியாளர் நியமனம் வரை அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், என்.பி.ஆருக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, காந்திய வழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3 தீர்மானங்கள்
பரபரபான அரசியல் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாவட்ட வாரியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பியதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் பாராட்டும், நன்றியும் கூறினார். அதனை தொடர்ந்து 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒத்துழையாக இயக்கம்
என்.பி.ஆருக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, காந்திய வழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை போராட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை முதலமைச்சர் கொச்சைப்படுத்திவிட்டார் என்றும், இதற்காக திமுக கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணை
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த அரசுப் பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளும், நியமனங்களும் ஊழலுக்குப் புதியதொரு வரலாறு எழுதியுள்ளதாக விமர்சிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ள பணி நியமன முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரித்திட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

சட்டம் இயற்றுக
டெல்டாவில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழக அரசுவிவசாயிகளை ஒட்டு மொத்தமாக ஏமாற்றி, ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பதாக மாவட்டச் செயலாலர்கள் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications