நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. அப்போது மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
புதியவர்களுக்கு எத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும், எத்தனை வாரிசுகள், ஏற்கெனவே சிட்டிங் எம்பியாக உள்ளவர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு போன்றவை எல்லாம் நாளை தெரியவரும்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. சேலம், தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, பெரம்பலூர், தஞ்சை, தென்காசி, தூத்துக்குடி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆரணி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது
21 தொகுதிகளுக்கும் திமுக வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு காணொலி மூலம் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப் போகும் நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications