வட மாவட்டங்களில் ஏறி வரும் திமுக.. எடப்பாடி திட்டத்தை தேமுதிகவை வைத்து முடிக்கும் ஸ்டாலின்!
சென்னை: வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே தேமுதிகவை தங்களின் கூட்டணிக்குள் திமுக கொண்டு வந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். வன்னியர்கள் வாக்குகள் திமுக பக்கம் வரும் என்றாலும், அதிமுக - பாமக கூட்டணி பெறும் அளவிற்கு கிடைக்காது என்றும், அதனால் வன்னியர்களுக்கு எதிரான வாக்கு வங்கியை முழுமையாக அறுவடை செய்ய திமுக தயாராகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக உடன் முதல்முறையாக தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வந்ததற்கு நாயுடு சமூக வாக்கு வங்கி, தென் மாவட்டங்களில் இருக்கும் மக்களின் ஆதரவு உள்ளிட்டவை காரணமாக சொல்லப்படுகின்றன. ஆனால் திமுக தலைமையின் இந்த மூவ் விவரம் அறிந்த பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

அதாவது தேமுதிகவின் வாக்கு வங்கி தென் மாவட்டங்களை விடவும் வட மாவட்டங்களில் கணிசமாக உள்ளது. இதன் காரணமாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தனது சொந்த ஊரில் போட்டியிடாமல் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டார். இதன் மூலமாக பாமகவின் எதிர்ப்பு வாக்குகளை தேமுதிக அறுவடை செய்தது.
கடந்த முறை வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை அறிவித்து வட மாவட்டங்களில் அதிமுக - பாமக கூட்டணி ஆதிக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தினார். அது ஓரளவிற்கு அதிமுகவுக்கு கைகொடுத்தது. இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்ததால் திமுக அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அள்ளியது. இம்முறையும் அதிமுகவுடன் அன்புமணி கைகோர்த்துள்ளார்.
இதனால் சென்னை முதல் விழுப்புரம் வரையிலான பெரும்பாலான வன்னியர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாகவே ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணிக்குள் கொண்டு முயற்சியை திமுக எடுக்கவில்லை. ஏனென்றால் ராமதாஸ் உள்ளே கொண்டு வரப்பட்டால், தலித் மக்களின் ஆதரவு முழுமையாக பறிபோகும்.
இதனால் திமுக தலைமை வன்னியர்களுக்கு எதிர்ப்பு வாக்கு வங்கியை மொத்தமாக சேர்க்க திட்டமிட்டது. அந்த வகையில் தேமுதிக வெற்றிபெற்ற தேர்தல்களில் எல்லாம், பாமக உடன் அக்கட்சி கூட்டணியில் இல்லை. அதேபோல் திமுக எடுத்த சில சர்வேக்களிலும் விவரமாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே விசிக கூட்டணியில் இருப்பதால், தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை சில மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டனர்.
அதற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்தி வட மாவட்டங்களில் திமுக வெல்வதற்கான வியூகங்களை கச்சிதமாக முடித்துள்ளது. அண்மையில் கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டிலும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர்












Click it and Unblock the Notifications